திருப்பூர், பிப்.8- திருப்பூரில் 17 ஆண்டுகளுக்கு மேல் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் அணைப்பாளையம் பாலப்பணிகள், எப் போது முடியும் என மக்கள் காத்திருக்கின்ற னர். அணைப்பாளையம் பகுதியில், மங்கலம் சாலை – கல்லூரி சாலையை இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலமும், ரயில் தண்டவாளத்தின் குறுக்கே மேம்பாலம் கட்ட கடந்த 2006ஆம் ஆண்டு ரூ.6.50 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டதன் காரணமாக கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2017 கட்டுமானப் பணிகளுக்கான திட்டத்தின் மதிப் பீடு 19.29 கோடி உயர்த்தப்பட்டு மீண்டும் பணி கள் மேற்கொள்ளப்பட்டது. நொய்யல் ஆற் றின் குறுக்கே உயர்மட்ட பாலமும், ரயில் வழித்தடத்தின் குறுக்கிலும் பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இந்த மூன்றையும் இணைக்கும் வேலைகள் மட்டும் தொடர்ந்து இழுபறியாகவே இருக்கின்றன. பாலத்தின் கீழே உள்ள சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், நொய்யல் ஆற்றின் மீது கட்டப்பட் டுள்ள உயர்மட்டப் பாலத்தின் இருபுறமும் சாலை இணைப்புக்காக வெறும் மண் மட் டுமே கொட்டப்பட்டுள்ளது. 17 ஆண்டுக ளுக்கு மேலாக நடைபெறும் அணைப்பாளை யம் பாலப் பணிகள், எப்போது முடியும் என மக்கள் காத்திருக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், தற்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்ச ராக உள்ள மு.பெ.சாமிநாதன் முந்தைய ஆட்சிக் காலத்தில் மாநில நெடுஞ்சாலை மற்றும் சிறு கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அணைப்பாளை யம் பாலப்பணிகள் தொடங்கப்பட்டது. பின்பு நிலப் பிரச்சனை, ஆக்கிரமிப்பு, நீதிமன்ற வழக்கு என பாலப்பணிகள் பல ஆண்டுக ளாக கிடப்பில் உள்ளது. அவிநாசி சாலை போக்குவரத்து சிக்னல்கள் நிறைந்த சாலை. வெளி மாவட்டங்களில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கும், வெளி மாவட்டங்களுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்ல இப்பாலப்பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் உதவிகரமாக இருக்கும். மேலும், ரங்கநாதபுரம், சிறுபூலு வபட்டி, வேலம்பாளையம் வரை சாலைக ளும் மோசமாக உள்ளது. தார் சாலை மண் சாலையாக மாறியுள்ளது. இதனால் பொது வாக 6 ஆயிரம் கிலோமீட்டர் வரை ஓடும் டயர் களை, 4 ஆயிரம் கிலோ மீட்டரில் மாற்ற வேண்டி உள்ளது. லோடு ஏற்றி செல்லும் வாடகை ஓட்டும் வாகனங்கள் அடிக்கடி பழு தாகிறது. கேட்டால் பாதாள சாக்கடைப் பணி, அந்த பணி, இந்த பணி என காரணம் கூறு கின்றனர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பாலப்பணிகளையும், சாலைப் பணிகளையும் முழுமையாக முடிக்க வேண்டும் என்றார். இதுகுறித்து வேலம்பாளையம் நகர சிபி எம் செயலாளர் ச.நந்தகோபால் கூறியதா வது, பாலப் பணிகள் துவங்கி 17 ஆண்டு கள் ஆகிவிட்டது. ஆனால் ஒருபுறம் அந்தரத் தில் தொங்கிக் கிடக்கிறது. இதனால் பாலத் திற்கு அடியில் சமூக விரோத செயல்கள் நடை பெற்று வருகிறது. மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள அணைப்பா ளையம் முதல் வேலம்பாளையம் வரை உள்ள சாலை மண் சாலையாக மாறி, குண் டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலை புழுதி மண்டலமாக கிளம்பும் தூசிகளால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று வரு கிறது. மேலும் இச்சாலையை பயன்படுத்திய மக்கள் விபத்துக்கு உள்ளான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பல முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அரசு அலுவலர்களைச் சந்தித்து மனு அளித் துள்ளோம். இருப்பினும் பணிகள் முழுமை அடையாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். உடனடியாக அணைப்பாளையம் முதல் வேலம்பாளையம் வரை உள்ள சாலையை அமைக்க வேண்டும். பாலப் பணிகளை வேகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி அடுத்தக்கட்ட போரட்டங் கள் நடத்துவோம் என தெரிவித்தார்.