districts

கனமழையால் பயிர்கள், வீடுகள் கடும் சேதம்: உரிய இழப்பீடு வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜன.3 - சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர் உள்ளிட்ட சாகுபடிகளும், வீடுகளும் கடுமையான சேதமடைந் துள்ளன. அரசு உரிய இழப்பீடு வழங்க  வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுக்கோட்டை மாவட்டக்குழு கூட்டம் மாநிலக்குழு உறுப்பினர் எம். சின்னத்துரை எம்எல்ஏ., தலைமை யில் ஞாயிற்றுக்கிழமை புதுக் கோட்டையில் நடைபெற்றது. மாநி லக்குழு முடிவுகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பேசினார்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தி ருப்பதாவது:

நார்த்தாமலை அருகே பசுமலைப் பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும்  பயிற்சியின் போது குண்டடிபட்டு படு காயமடைந்த சிறுவன் புகழேந்தி  தற்பொழுது தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவ ருக்கு தரமான உயர்சிகிச்சை அளிக்க வும், பாதிக்கப்பட்ட சிறவனுக்கு உரிய  நீதியும், நிவாரணமும் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தி லிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வீட்டில் சாப்பிட் டுக் கொண்டு இருந்த சிறுவனுக்கு இத்தகைய கோரச் சம்பவம் நடந்துள் ளது. எனவே, இதில், தவறிழைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீ பத்தில் பெய்த கனமழையின் காரண மாக ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவு டையார்கோவில், மணமேல்குடி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில்  நெற்பயிர் உள்ளிட்ட சாகுபடிகள் கடு மையான பாதிப்புக்கு உள்ளாகியுள் ளது. இடுபொருட்களின் விலை உயர் வால் கடுமையான செலவு செய்து அறுவடைக்கு தயாரான நிலையில் இத்தகைய இழப்பு ஏற்பட்டுள்ளது.  மேலும், கனமழையின் காரண மாக கூரை மற்றும் ஓட்டு வீடுகளும் கடு மையாக சேமடைந்துள்ளன. மேற்படி  பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசும் மாவட்ட நிர்வா கமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுக்கோட்டையில் இயங்கி  வந்த மாவட்ட தலைமை மருத்துவ மனையில் அரசு மருத்துவக் கல்லூரி  தொடங்கப்பட்டதை அடுத்து அறந் தாங்கிக்கு மாற்றப்பட்டது. ஏற்க னவே, இயங்கி வந்த மாவட்டத் தலைமை மருத்துவமனையை புதுக் கோட்டை நகர்ப்புற மருத்துவமனை யாக மாற்ற வேண்டுமென தொடர்ந்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் வலி யுறுத்தப்பட்டது.  இதனைத் தொடர்ந்து நகர்புற அரசு மருத்துவமனையாக அர சாணை வெளியிடப்பட்டு கட்டிடங்க ளின் மராமத்துப் பணிகளும் நிறை வடைந்துள்ளன. ஆனால், இதுவரை  மருத்துவமனை திறக்கப்பட வில்லை. புதுக்கோட்டை நகரில்  இயங்கி வரும் தனியார் மருத்துவ மனைகளின் நிர்ப்பந்தத்தின் காரண மாக இது திறக்கப்படவில்லையோ என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் உள்ளது. 

எனவே, ஏழை, எளிய மக்களின் நலன்கருத்தி ‘டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி புதுக்கோட்டை நகர்புற மருத்துவமனை’ என்ற பெயரில் உட னடியாக திறக்கப்பட்ட வேண்டும். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புற நோயாளிகளாக வருபவர்களுக்கு சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை எடுத்து வருமாறு மருத்துவர்கள் பரிந்துரைக் கின்றனர். ஆனால், மேற்படி மையங் களில் 15 நாள், 20 நாட்கள் கழித்து  வருமாறு கெடுவிதித்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால், புறநோயாளிகள் கடுமையான பாதிப் புக்கு உள்ளாகின்றனர். எனவே, மேற்படி பரிசோதனைகளை உடனுக் குடன் எடுத்துத் தர மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருக்கைகள், குடிநீர்,  கழிப்பறை போன்ற அடிப்படை வசதி களின்றி பயணிகள் அவதிப்பட்டு வரு கின்றனர். மேற்படி அடிப்படை வசதி களை உடனடியாக செய்துதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், என்.பொன்னி, கே. சண்முகம், சி.அன்புமணவாளன், ஜி. நாகராஜ், த.அன்பழகன், சு.மதியழ கன், துரை.நாராயணன், எஸ்.ஜனா ர்த்தனன் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.