districts

img

காட்டூரில் புறநகர் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும்

திருச்சிராப்பள்ளி, பிப்.4 - காட்டூர் பகுதியில் புறநகர் பேருந்துகள் நின்று செல்லக் கோரி தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சி-தஞ்சை சாலை காட்டூரில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியில் புறநகர் பேருந்து கள் நின்று செல்வதில்லை. ‘இங்கு புறநகர்  பேருந்து நிற்க வேண்டும்’ என்ற அரசாணை  மற்றும் அரசு அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்ட ஒப்பந்தத்தை மீறு கிற போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். காட்டூரில் புற நகர் பேருந்துகள் நிற்க உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் காட்டூர் பகுதி கிளைகள் சார்பில் ஞாயிறன்று தொடர் முழக்கப் போராட் டம் நடைபெற்றது. காட்டூர் கடைவீதியில் நடைபெற்ற போராட் டத்திற்கு பகுதிக் குழு உறுப்பினர் செந்தில் குமார் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலா ளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா, காட்டூர் பகுதி செயலாளர் மணி மாறன் ஆகியோர் பேசினர். குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக பகுதி குழு உறுப்பினர்  நல்லையா வரவேற்றார். மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்டச் செயலாளர் குமார் நன்றி  கூறினார்.