திருவாரூர், ஜூலை 8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் சேகல் ஊராட்சி கிராமத்தில் உள்ள தபோல்நாயக்கபுரத்தைச் சேர்ந்த மூத்த தோழர் தியாகராஜன் (70) வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானார். தோழரின் மறைவு செய்து அறிந்த மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், நேரில் சென்று தியாகராஜன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு.பிரகாஷ் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர். அன்னா ரது இறுதி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.