கும்பகோணம், ஜன.13- கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியில் சாய்ந்து விழும் நிலையில், மிகவும் பழுதான சாய்ந்த நிலையில் உள்ள மின் மாற்றியை மாற்றி தர வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. அம்மனுவில் கூறியிருப்ப தாவது: கும்பகோணம் மாநக ராட்சிக்குட்பட்ட தாராசுரம் எலுமிச்சங்காய் பாளையம் பேக்டரி ரோடு பொன்னியம் மன் கோவில் தெரு வழி நடப்பு சாலை சந்திப்பில் இருந்து வரும் உயர் அழுத்த மின் மாற்றி, கடந்த 2020 இல் பெய்த கன மழையி னால் வடிகால் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்திற்கு தெரியப் படுத்தப்பட்டது. ஆனால், மின்வாரியம் மின்மாற்றியை சீரமைக்காத தால், 2021 டிசம்பரில் பெய்த தொடர் கன மழையினால் மின்மாற்றி மேலும் மண் அரிப்பு ஏற்பட்டு சீர்கெட்ட நிலையில் சாய்ந்த நிலை யில் மின் கம்பிகளில் மின்கம் பங்கள் தொங்கிக் கொண்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி உரிய நடவ டிக்கை எடுத்து உடனே மின்மாற்றியை சீரமைத்து விபத்தைத் தவிர்க்க வேண் டும் என சிபிஎம் சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.