புதுக்கோட்டை, ஜன.22- பல மாதங்களாக குடிநீர் வராததைக் கண்டித்து புதுக் கோட்டை உசிலங்குளத்தில் குடிநீர்த் தொட்டிக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநக ரக்குழு சார்பில் புதன்கிழமை நூதனப் போராட்டம் நடை பெற்றது. புதுக்கோட்டை உசிலங் குளம் பகுதியில் சிறுமின் விசைத் தொட்டி இயங்காத தால் பல மாதங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் குடத்து க்கு 10 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய அவலம் தொடர்கிறது என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்ற னர். மேலும், பாதாள சாக்கடை கழிவுநீர் குடிநீரில் கலப்பதை தடுக்க வேண்டும். தெரு நாய்க ளையும், சுற்றித்திரியும் மாடு களையும் கட்டுப்படுத்த வேண்டும். புதுக்கோட்டை யில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலை அகலப் படுத்தும் பணியை வேகப் படுத்த வேண்டும். உசிலங் குளத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். அய்யனார் திட லில் பூங்காவிற்கு ஒதுக்கப் பட்ட இடத்தில் உடனடியாக பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டதின் போது பழுத டைந்து இயங்காத சிறு மின்விசை குடிநீர்த் தொட்டி களுக்கு பறை அடித்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து கோரிக்கை முழக்கம் எழுப் பப்பட்டது. போராட்டத்திற்கு கட்சி யின் மாநகரக்குழு உறுப்பி னர் மருத்துவர் ஆர்.கார்த்திக் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சு.மதியழகன், மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.காயத்ரி, மாநகரக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பேசினர்.