திருச்சிராப்பள்ளி, ஆக.30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச் சாமி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமா ரிடம் வெள்ளியன்று கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எடமலைப்பட்டி புதூர் பகுதியில் 1500- க்கும் மேற்பட்ட ஏழை,எளிய மக்கள் நீண்ட நாட்களாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய வருமா னம் இல்லாததால் குழந்தைகள் கல்விச் செலவு உள்பட வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகின்ற னர். இவர்களில் 700-க்கும் மேற்பட்டோர் கடந்த 2019 ஆம் ஆண்டு வீடு வழங்க கோரி மனு கொடுத்தனர். மீண்டும் 2023 ஆம் ஆண்டு மனு கொடுத்தனர். இதற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக பதில் கடிதம் கிடைத்தது. ஆனால் கடந்த 9 மாதமாக எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து உடனே வீடு வழங்க கோரி 25.7.2018 ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இப்பகுதி மக்கள் கொடுத்த மனு மீது உரிய விசாரணை செய்து நிலம், நிதி ஒதுக்கீடு செய்து அடுக்குமாடி குடியிருப்பு, தொகுப்பு வீடு கட்டித்தர கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுவை அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.