districts

img

போலீசார் கண்முன்னே பட்டியலின இளைஞர் கொலை சிபிஎம் பெரம்பலூர் மாவட்டக் குழு கண்டனம்

பெரம்பலூர், ஜன.17 - போலீசார் கண்முன்னே பட்டியலின இளைஞர் கழுத்த றுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை. களத்தூர் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவரை, கை. களத்தூர் கிராமத்தில் வசிக்கும் சாதி ஆதிக்க பிரிவைச் சேர்ந்த தேவேந்திரன் (30) என்பவர் சாதிய வன்மத்துடன் போலீசார் கண்முன்னே கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளார். இச்சம்பவத்திற்கு உடந்தையாக செயல்பட்ட காவல் துறையையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இந்த  கொடூர சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.