districts

img

ஈச்சம்பட்டியில் சிபிஎம் புதிய கிளை துவக்கம்

கரூர், ஜூலை 1 - கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட ஈச்சம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை துவக்க விழா மற்றும் கொடி ஏற்று விழா நடைபெற்றது.  கட்சியின் துவக்க விழாவிற்கு கிளைச் செயலாளர் அ.சிவமணி தலைமை வகித்தார். கிளைத் தலைவர் சு.மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு கட்சி செங்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச்செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.தண்டபாணி, சங்கரநாராயணன், ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.பிரபாகர் ஆகியோர் பேசினர்.  கிளைச் செயலாளர்கள் ரஜினி, சிறும்பாயி, கிளை துணைத் தலைவர் பெ.சண்முகம், பொருளாளர் சி.வெங்கடாசலம், கிளை உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  பொதுக் கழிப்பறைகள் இல்லாததால், ஈச்சம்பட்டியில் உள்ள அருந்ததியர் மக்கள் திறந்த வெளியில் செல்லும் அவல நிலையில் உள்ளனர். கரூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பொது கழிப்பிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். இளைஞர்கள் அதிகளவில் இருப்பதால் உடற்பயிற்சி கூட்டத்துடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும். பொதுமக்களுக்கு நூறு நாள் வேலை வழங்க வேண்டும். இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாய கூடம் கட்டித் தர சிவாயம் ஊராட்சி மன்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

;