districts

img

அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நாடாளுமன்றத் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த சிபிஎம் வலியுறுத்தல்

கும்பகோணம், மார்ச் 18 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. இதற்கு மயி லாடுதுறை மாவட்ட ஆட்சியரும் மயி லாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்தார். கூட்டத்தில் திமுக, சிபிஎம் உள்ளிட்ட  அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் ஏ.பி. மகாபாரதி, “தேர்தல் விதிகளை மீறுவோர் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் சுமூகமாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு  வழங்க வேண்டும்” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கும்பகோணம் மாநகராட்சி மா மன்ற உறுப்பினர் செல்வம், மாநகர உறுப்பினர் பழ.அன்புமணி, மாவட்டக் குழு உறுப்பினர் பக்கிரிசாமி, சுப்பிர மணியன் ஆகியோர் கலந்து கொண்ட னர். அப்போது அவர்கள் பேசுகையில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஜனநா யக முறைப்படி நடக்க வேண்டும். தேர்தல் அதிகாரிகள் தொடர்பு கொண்டு விபரம் அறியவும், புகார் தெரி விக்கவும் தொலைபேசி எண்கள் வெளி யிட வேண்டும். தேர்தல் நடக்கும் நாள்  முன்பு தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திக்  கொள்ளும் கால அவகாசம் 48 மணி நேரம் என்பதை 36 மணி நேரமாக மாற்ற வேண்டும்” என்றனர்.  இதனை ஏற்றுக் கொண்ட தேர்தல்  நடத்தும் அலுவலர், விரைவில் நடவ டிக்கை எடுத்து தொடர்பு தொலைபேசி எண்கள் வெளியிடப்படும் என தெரி வித்தார். மயிலாடுதுறை கூடுதல் ஆட்சியர்  மு.ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலு வலர் மு.மணிமேகலை, கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, கும்பகோணம் வட்டாட்சியர் வெங்க டேஸ்வரர் உள்ளிட்ட தேர்தல் தொடர் பான அதிகாரிகள் உடனிருந்தனர்.