புதுக்கோட்டை, ஜன.30 - ஆளுநருக்கு எதிரான போராட் டத்தில் அராஜகமாக நடந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் மாண்புகளை சிதைக்கும் வகையில் மாநில ஆளு நர் ஆர்.என்.ரவி, தான் செல்லும் இடங்களில் எல்லாம் விஷமப் பிரச் சாரத்தை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றும் கோப்புகளுக்கும், மசோதாக்களுக்கும் கையெழுத்தி டாமல் அரசியல் அமைப்புச் சட்டத் தையும், மரபுகளையும் மீறி வரு கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் தினந்தோ றும் ஆளுநர் மீது கடுமையான குற்றச் சாட்டுகளை முன்வைத்து வரு கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பா லான அரசியல் கட்சிகளும், பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம், அவர் வருகையைக் கண்டித்து கருப்புக்கொடியுடன் போராட்டங் களை முன்னெடுத்து வருகின்றனர். அதனொரு பகுதியாகத் தான் 29.1.2024 அன்று புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு ஆளுநர் வருகை தருவதை எதிர்த்து சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தயாராக இருந் தோம். ஆளுநர் மதியம் 2.45 மணிக்குத் தான் வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்று அதிகாலை முதலே அந்தப் பகுதியில் நூற்றுக் கணக்கான போலீசார் குவிக்கப்பட்ட னர். காலை முதலே அந்தப் பகுதி யில் கட்சியினர் யாரும் நிற்கக்கூடாது எனக் கடுமை காட்டத் தொடங்கினர். காலை 11 மணிக்கு போராட்டம் நடத்தவுள்ளவர்களைச் சுற்றிலும் வேலிகளை அமைத்து நடமாட விடா மல் செய்துவிட்டனர். காவல்துறையினரின் நெருக்கடி யால் 2.45 மணிக்கு வருகைதர இருந்த ஆளுநரை எதிர்த்து 11.30 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடுப்புகளை வைத்து தள்ளி அராஜகத்தில் ஈடுபட்டனர். எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னத்துரை, கீரனூர் பேரூ ராட்சி கவுன்சிலர் மகாலெட்சுமி, காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவர் இப்ரா ஹிம்பாபு உள்ளிட்டோருக்கு ரத்தக் காயம் ஏற்படும் அளவுக்கு போலீசா ரின் அராஜகம் இருந்தது. எங்களை பேட்டி எடுக்க வந்த நிருபர்கள் மீதும் ஏடிஎஸ்பி தேன் தமிழ்வளவன் கடுமையான வார்த்தை களை பிரயோகித்து அராஜகம் செய்தார். எம்.சின்னதுரை எம்எல்ஏ, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோரையும் ஒரு மையில் திட்டி மிகவும் அநாகரிக மாக நடந்துகொண்டார். ஏடிஎஸ்பி தேன்தமிழ்வளவன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரி களின் நடவடிக்கை அராஜகமாக இருந்தது. காவல்துறை மாநில அர சின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற கேள்வி எழும் அளவுக்கு அவர்களின் செயல்பாடு இருந்தது. ஏடிஎஸ்பி தேன்தமிழ்வளவன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரி களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழு சார்பில் கண்டனத்தைத் தெரி வித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசு இத்தகைய செயலில் ஈடுபட்ட தேன்தமிழ்வள வன் உள்ளிட்ட காவல்துறை அதி காரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத் துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.