districts

img

கைச் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருவிடைமருதூரில் சிபிஎம் பிரச்சாரம்

கும்பகோணம், ஏப்.7- இந்தியா கூட்டணியின் மயிலாடு துறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறி ஞர் சுதாவை ஆதரித்து, கை சின்னத் திற்கு வாக்குச் சேகரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதனொரு பகுதியாக ஞாயிறன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ஒன்றி யத்தில், திருவிசநல்லூரில் துவங்கி  வேப்பத்தூர் பேரூராட்சி திருமங்கலக் குடி, சூரியனார்கோவில், நரசிங்கம் பேட்டை, சாத்தனூர், எஸ்.புதூர் திரு நீலக்குடி, மருத்துவக்குடி, ஆடுதுறை, கோவிந்தபுரம் திருவிடைமருதூர், திருபுவனம், தேப்பெருமானநல்லூர், திருநாகேஸ்வரம் பகுதிகளில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுதாவிற்கு கைச் சின்னத்தில் வாக்குகள் சேகரித் தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், திருவிடை மருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் நாகேந்திரன், மாவட்டக் குழு உறுப்பி னர் ஜீவபாரதி, பக்கிரிசாமி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.