சின்னாளபட்டி, ஏப்.23- தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிக மாக இருப்பதால் கால்நடை களுக்கு தேவையான தீவ னம், மேய்ச்சலுக்கு இடம் தேடி கால்நடை வளர்ப்ப வர்கள் அலைந்து கொண்டி ருக்கின்றனர். இந்த நிலையில் திண் டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ள விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜ புரம், மீனாட்சிபுரம், கல்ல டிப்பட்டி, அணைப்பட்டி, சித் தர்கள் நத்தம் உள்ளிட்ட பகு திகளில் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு மூன்றாம் போக நெல் சாகுபடி செய்த விவ சாயிகள் அறுவடை செய்தனர். அந்த வயல்களில் தற்போது ஆடு, மாடுகளை கால்நடை வளர்ப்பவர்கள் மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த வெயி லுக்கு அறுவடை செய்த நெல் வயல்களில் ஆங காங்கே பச்சைப் புல் கிடைப்ப தால் மாடுகளுக்கு உகந்த உணவாக இருக்கும்.