districts

பொது நிதியிலிருந்து பணிகள் ஒதுக்கப்படவில்லை

அரியலூர், டிச.14- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் நகராட்சி அலுவலக மன்றத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த எம்.எல்.ஏ. ஆய்வு கூட்டம் வியாழக்கிழமை நடை பெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் சுமதி சிவக்குமார் தலைமை யில் வகித்தார். நகராட்சி ஆணையர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வார்டு கவுன்சிலர் அம்பி காபதி - எனது வார்டில் இரண்டரை ஆண்டுகளாக, பொது நிதியிலிருந்து மக்கள் பணிகள் செய்வதற்கு இது வரை நிதி ஒதுக்கப்படவில்லை. நாங்க ளும் நகராட்சி ஆணையரிடம் பலமுறை  தெரிவித்து விட்டோம். இதுவரை பொது  நிதியில் இருந்து 21 வார்டுகளுக்கும் நிதி ஒதுக்கி எந்த பணிகளையும் செய்ய வில்லை. மக்கள் எங்களை கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டா யத்தில் உள்ளோம். ஆனால் இது பற்றி  நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை  வில்லை என குற்றம் சாட்டினார்.  ரங்கநாதன் - கீழக்குடியிருப்பு பகுதி யில் சத்துணவுக் கூடம் பழுதடைந்துள் ளது. இதுகுறித்து நகர்மன்ற கூட்டத்தில்  பலமுறை தெரிவித்தும், எந்த நடவ டிக்கையும் இல்லை. அதேபோன்று தரைப்பாலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தேன். அதுவும் நிறை வேற்றப்படவில்லை.  கிருபாநிதி - கீழத் தெருவில் மயா னத்திற்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்த  வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண் டும். சம்பந்தப்பட்ட வார்டுகளில் நக ராட்சி மூலம் பணிகள் நடைபெறுவதை கவுன்சிலருக்கு தெரிவிக்க வேண்டும்  என்றார். சின்னவளையம் கவுன்சிலர் ஜோதி - அரசு இடத்தில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும். அரங்க னேரியை தூர்வார வேண்டும். பைப் லைன் அமைத்து தரவேண்டும். பாப்ப னேரியில் உள்ள குடிநீர் பிரச்சனையை  சரி செய்ய வேண்டும். செல்வராஜ் - ஜெயங்கொண்டம் கடைவீதியில் கழிவறை வசதி இல்லாத தால், பெண்கள் மிகவும் சிரமப்படு கிறார்கள். உடனே கழிவறை வசதி  ஏற்படுத்த வேண்டும். ஜெயங்கொண் டம் நகராட்சியில் குடிநீர் பிரச்சனையை  தீர்ப்பதற்கு, மோட்டார் வசதி கை யிருப்பு வைத்திருக்க வேண்டும்.

ருக்ஷானா பேகம் - முஸ்லிம் சுடு காட்டிற்கு காம்பவுண்ட் சுவர் அமைத்து  தர வேண்டும். ஒப்பேரி தெருவிற்கும், பழைய முன்ஷிப் கோர்ட் செல்லும் சாலைக்கும் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும். கவுன்சிலர் சுந்தராபாய் ராபர்ட் - சிதம்பரம் சாலை யில் உய்யக்கொண்டான் ஏரி பகுதியில்  கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கழிவு களை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். சிதம்பரம் சாலையின் இரு புறமும் சாக்கடை நீர் செல்லும் வகையில்  சின்னவளையம் வரை கழிவுநீர் வாய்க் கால் அமைக்க வேண்டும் என்றனர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப் பினர் க.சொ.க.கண்ணன் பதிலளித்து பேசுகையில்,  ஜெயங்கொண்டம் நக ராட்சியில் வளர்ச்சி பணிகளை ஒப்பந்த தாரர்கள் விரைந்து முடிக்க வேண்டும்.  அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பணி கள் நிறைவடையாமல் உள்ளன. குறிப்பாக 2021-22-ம் ஆண்டில் எடுக்கப் பட்ட பணிகள் இன்னும் நிறைவடையா மல் உள்ளன. அப்பணிகளை விரைந்து  முடிக்க வேண்டும்.  ஜெயங்கொண்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 2 பணிகள்  பாக்கி உள்ளது. அதனை 15 தினங்களுக் குள் முடிக்க வேண்டும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பொன்னேரி மற்றும் ஆவேரியை தூர்வாருவதற்கு முழு முயற்சி எடுத்து  வருகிறேன். அதே போன்று குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு 5 இடங்க ளில் கொள்ளிடம் குடிநீர் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்ப தற்கும் கோரிக்கை வைத்துள்ளேன். ஜெயங்கொண்டம் தொகுதியில் மட்டும் 80 அங்கன்வாடி மையங்களும்,  18 ரேசன் கடைகளும் அமைக்க கோரிக்கை வந்துள்ளது. சட்டமன்றத் தில் பேசி இதற்கு உரிய தீர்வு காணப்ப டும்.  கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.  நகராட்சி ஆணையர் கூறுகையில்,  பொதுநிதியில் முக்கியமான பணி களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படு கிறது. இனிவரும் காலங்களில் பொது நிதியில் பணிகள் செய்வதற்கு உரிய நட வடிக்கை எடுக்கப்படும்” என்றார்.  இதில் வார்டு கவுன்சிலர்கள், நக ராட்சி மேலாளர் அன்புச்செல்வி உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், பம்பு ஆப ரேட்டர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.