districts

img

கொரோனா பலி: குடும்பத்துக்கு இழப்பீடு எம்.சின்னத்துரை எம்எல்ஏ வழங்கினார்

புதுக்கோட்டை, டிச.9-  கொரோன பெருந்தொற்றில் உயிரிழந்தவர்களின் குடும் பத்திற்கு அரசின் இழப்பீட்டுத் தொகையை கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை புதனன்று வழங்கினார். கந்தர்வகோட்டை தாலு காவில் பெருந்தொற்றால் உயிரி ழந்த இரண்டு குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அரசு சார்பில் ஏற்கனவே அறி விக்கப்பட்டிருந்தது. அதன டிப்படையில் உயிரிழந்த முருகேசன் மனைவி காந்தி மதியிடமும், தனக்கொடி மனைவி தங்கப்பொண்ணு விடமும் இழப்பீட்டுத் தொகை யை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை வழங்கினார். கந்தர்வகோட்டை வட்டாட் சியர் புவியரசன், ஒன்றியப் பெருந்தலைவர் கார்த்திக், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.