தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் 97-வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் போப் பிரான்சிஸ் அரங்கத்தில் நடைபெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் சந்திரசேகர் ,கல்லூரியின் செயலர் முனைவர் புஷ்பராஜ், முதல்வர் முனைவர்.மரியதாஸ் ஆகியோர் பங்கேற்றனர். 1,313 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.