districts

img

ஸ்ரீதியாகராஜா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவாரூர், ஜூலை 13 - திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள ஸ்ரீ தியாகராஜா கல்வியியல் கல்லூரியில் 2018, 2019, 2020 ஆம் ஆண்டு படித்த  மாணாக்கர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் செயலர் என்.கணேசன் தலைமை வகித்தார்.  பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் சுலோக்ஷனா சேகர் மாணாக்கர்களுக்கு பட்டங்களை வழங்கி னார். கல்லூரியின் முதல்வர் கோ.உமாமகேஸ்வரி மற்றும் மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.