பெரம்பலூர், பிப்.5 - பொதுப் பணித்துறை யின் நீர்வளத்துறை சார்பில் பெரம்பலூர் ஒன்றியம் விளாமுத்தூர் கிராமத்தில் ரூ.3.09 கோடி மதிப்பீட்டில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் க.கற்ப கம் தலைமையில் திங்க ளன்று தொடங்கி வைத்தார். இதற்கு பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் ம.பிரபா கரன் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்டத் தில் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 73 ஏரிகள் 33 அணைக்கட்டு கள் மற்றும் 2 நீர்த்தேக்கங் கள் உள்ளன. மருதை யாறு, கொள்ளிட ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றா கும். மேலும் இது பெரம்ப லூர் மாவட்டத்தில் உள்ள தம்பிரான்பட்டி கிராமத் திற்கு அருகில் உள்ள பச்சை மலையிலிருந்து பெரம் பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் வழியாக தென் கிழக்கு திசையில் பாய்ந்து, கொள்ளிடத்தில் இணை கிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள துத்தூர் மற்றும் வைப்பூர் கிராமங்களுக்கு அருகில் 70.40 கி.மீ தூரம் பாய்ந்தோடி கொள்ளிடத் தில் கலக்கிறது. விளா முத்தூர் கிராமத்திற்கு அருகே மருதையாற்றில் தடுப்பணை அமைக்கப்படு வதன் மூலம் மருதையாற் றின் நீர் வீணாவதை தடுப் பதுடன், தடுப்பணையை சுற்றியுள்ள பகுதியில் 125 கிணறுகளின் நீர்மட்டம் உயரும். மேலும் மறைமுக ஆயக்கட்டு 665.50 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன டைவதுடன் குடிநீர் ஆதார மும் அதிகரிக்கும். இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை செயற்பொறியாளர் வை.வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் சரவ ணன், உதவி பொறியாளர் த.மருதமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.