கும்பகோணம், ஜூன் 11-
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங் களைப்பெற்ற 161 மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன் முயற்சியில் பாராட்டு-பரிசளிப்பு விழா திருவி டைமருதூரில் நடைபெற்றது. நிகழ்விற்கு மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் இராமலிங்கம் தலைமை வகித்தார்.
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி அளவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் பெற்ற பந்தநல்லூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி ரிஷி வர்த்தினி, 12-ஆம்வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் பெற்ற ஆடுதுறை ரைஸ் சிட்டி பள்ளி மாணவி ஸ்ரீநிதி, பந்தநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி யோகேஸ்வரி ஆகியோருக்கு சிறப்புப் பரிசு கள் வழங்கப்பட்டன.
நாச்சியார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10, 12- ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மதன், ரஞ்சித், ஜீவா, சந்தோஷ், ஹரிஷ்காந்த், ரகுராசா, ஆகாஷ் உட்பட 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 161 மாணவ, மாணவிகளை பாராட்டி தலைமை கொறடா கோ.வி. செழியன் ஊக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.