districts

img

தேசிய பயிற்சியாளருக்கான அங்கீகாரம் மயிலாடுதுறை கராத்தே பயிற்சியாளருக்கு வாழ்த்து

மயிலாடுதுறை, மார்ச் 20 - சர்வதேச ஒலிம்பிக் குழுவினரால் அங்கீ கரிக்கப்பட்ட உலக கராத்தே கூட்ட மைப்பின் உறுப்பினராக கராத்தே இந்தியா  ஆர்கனைசேஷன் மற்றும் தமிழ்நாடு  ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ அசோசியேஷ னால், கராத்தே பயிற்சியாளர் அங்கீ காரத்திற்கான தேர்வு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடத்தப்பட்டது.  இதில் 200-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர் கள் கலந்து கொண்ட நிலையில், மயிலாடு துறை மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் செயலாளரும் மாவட்ட கராத்தே அணி பயிற்சியாளருமான சென்சாய் கராத்தே கதிரவன் தேர்வில் வெற்றி பெற்று உள்ளார். இவர், மாநில மற்றும் தேசிய பயிற்சியாள ருக்கான அங்கீகாரம் பெற்று மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒரே கராத்தே பயிற்சியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வெற்றி பெற்ற பயிற்சியாளரை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் மீனா, ஆய்வாளர்கள் செல்வம்  மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.