புதுக்கோட்டை, ஏப்.13- மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கான (சிஆர்பிஎப்) தேர்வை அட்டவணையில் உள்ள 22 அலுவல் மொழியிலும் நடத்த வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை தலைமை தபால் நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் டேவிட் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.மகாதீர், மாவட்டக்குழு உறுப்பினர் பி. அருண், மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பேசி னர்.