districts

ஜன.30-இல் மாநிலம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜன.20-  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில, தஞ்சை மாவட்ட நிர்வாகி கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சா வூரில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தின் மாநிலத் தலைவர் எம்.சின்னத்துரை தலைமை வகித் தார். அகில இந்திய துணைத்  தலைவர் ஏ.லாசர், மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம், மாநிலப் பொருளாளர் பழனிச்சாமி, மாவட்டச் செயலா ளர் ஆர்.வாசு, மாவட்டத் தலைவர்  பிரதீப் ராஜ்குமார், மாவட்டப் பொருளாளர் நாகராஜன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்திற்கு பின்னர் சங்கத் தின் மாநிலத் தலைவர் எம்.சின்ன துரை செய்தியாளர்களிடம் கூறிய தாவது:  வேளாண் தொழில் நவீன மயத்தால் இயந்திரப் பயன்பாடு அதிகரித்து விவசாயக் கூலித்  தொழிலாளர்களின் வேலை வாய்ப்பும் - வருமானமும் மிகவும்  குறைந்து விட்டது. இச்சூழ்நிலை யில், 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசு அமைந்த போது, இடதுசாரிகளின் குறைந்தபட்ச செயல்திட்டத்தால் ஊரக  வேலை உறுதித் திட்டம் உரு வாக்கப்பட்டு, 20 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, மகாத்மா காந்தி பெயரிலான இந்தத் திட்டத்தை பொறுப்பற்ற முறை யில் கேலியும் - கிண்டலும் செய்தது டன், தொடர்ந்து திட்டத்தை சிதைத்து, சீர்குலைத்திடும் முயற் சியை மேற்கொண்டுள்ளது. திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ் வொரு ஆண்டும் படிப்படியாக வெட்டிச் சுருக்கிவிட்டது. ரூ.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய  வேண்டியதில், ரூ.60.70 ஆயிரம் கோடி என 6-ல் ஒரு பங்கு தொகையை மட்டும் அற்ப-சொற்பமாக ஒதுக்கி 10 முதல் 40  நாட்கள் வரையே வேலை வழங்கியது. அரசின் தவறான பண மதிப்பிழப்பு, வரிவிதிப்பு, கொ ரோனா மற்றும் இயற்கைப் பேரி டர் பாதிப்புகளால் வேலையை  இழந்து, நிர்க்கதியான மக்களுக்கு உரிய நிவாரணம் அளித்து பாதுகாக்கவில்லை. மாறாக உழைத்து வாழ்ந்திட இருக்கும் வேலைத் திட்டத்தையும் ஒன்றிய பாஜக அரசு ஒழித்துக் கட்ட முயற்சிக்கிறது. அதானி -  அம்பானி போன்ற கார்ப்ப ரேட்டுகளின் நலன்களுக்காக ஆண்டுதோறும் பல லட்சம் கோடி  ரூபாய்களை மடைமாற்றம் செய்து மண்டியிட்டு நிற்கிறது. ஆதார் இணைப்புடன்கூடிய வேலை அட்டை - பரிவர்த்தனை (ABPS) முறை மூலம் ஏழை மக்க ளின் மீது தினமும் தாக்குதல் தொ டுக்கும் பாஜக அரசு MNREGA திட்டத்தில் அட்டை பெற்றுள்ள 25  கோடி பயனாளிகளில் 11 கோடி பேரின் வேலை அட்டைகளை வேலை வழங்காமலேயே நீக்கி விட்டது.

 ஆதார் எண் இணைக்கப்பட்ட (AADHAR BASED PAYMENT SYSTEM) வேலை அட்டைகளாக மாற்றி ஊதியப் பரிவர்த்தனை செய்கிறோம் என சொல்லி, டிசம்பர்  31 அன்றோடு அதையும் நிறுத்தி விட்டது. உரிய உதவிகளை வழங்கி, அனைத்து வேலை அட்டைதாரர்களையும் பதிவு செய் வதற்கு பதிலாக, பாதியோடு முடித்து, மேலும் 7 கோடி பேரை  நீக்கம் செய்திட முயற்சி எடுக்கப் பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிலும் பல லட்சம் பேர் இத்திட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலையை ஒன்றிய பாஜக அரசு உருவாக் கியுள்ளது. நிதி ஒதுக்கீட்டை குறைத்ததால், வேலை செய்து 3-4 மாதங்களாக சம்பளம் பெறா மல் அவதிப்படும் தொழிலாளர் களின் தலையில் மோடி அரசு போட்டுள்ள மற்றொரு இடிதான் இந்த ABPS திட்டம்.  கோரிக்கைகள் ஆதார் இணைப்புடன் கூடிய பரிவர்த்தனைக்கான முறையை (ABPS) உடனே திரும்பப் பெற  வேண்டும். அட்டைப் பெற்றுள்ள  அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக வேலையை துவங்க வேண்டும்.  சம்பள பாக்கியை காலம்  தாழ்த்தாமல் வழங்க வேண்டும். ஊரக வேலை சட்டத்தை திருத்து வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி  ஜன.30 அன்று மாநிலம் முழுவதும் உள்ள ஒன்றிய அரசு  அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.