districts

img

மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு கணினி தொழில்நுட்பவியல் பயிற்சி

மன்னார்குடி, ஆக. 9 -  அரசு பள்ளிக் கல்வித் துறை மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான செயல் திறன்மிகு வகுப்பறை, உயர் தொழில்நுட்ப ஆய்வக கணினி பயிற்சி வழங்கப்படுகிறது. மாவட்டத்தின் 10 ஒன்றியங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.  பயிற்சிக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பி.மயில்வாகனன் தலைமை வகித்தார். விரிவுரையாளர் கோ.சுகுணா, தேசிய மேல்நிலைப்பள்ளி எஸ். அன்பரசு, பரவக்கோட்டை மேல்நிலைப் பள்ளி கே.விஜயன், பொதக்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என். மாமலைவாசன், இருள் நீக்கி நடுநிலைப்பள்ளி எஸ்.பாரதி, மேல கண்டமங்கலம் நடுநிலைப்பள்ளி எம்.கணேசன் ஆகியோர் கருத்தாளர்களாக பயிற்சி அளித்தனர்.  லிபரா இம்ப்ரஸ், லிபரா ஆபீஸ், டக்ஸ் டைபிங், செயற்கை நுண்ணறிவு, கூகுள் டிரைவ், மணற்கேணி ஆகிய மென்பொருள் சார்ந்த தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாவட்டத்தின் அனைத்து ஆசிரியர்களுக்கும் வட்டார வளமையத்தில் சுழற்சி முறையில் பயிற்சி கொடுக்க உள்ளனர். விரிவுரையாளர் த.சரஸ்வதி நன்றி கூறினார்.