பெரம்பலூர், மார்ச் 10 - பெரம்பலூர் மாவட்ட தீக்கதிர் வாசகர் வட்டம் சார்பில் ஜன. 20 முதல் மார்ச் 9 வரை வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மார்க்சிய தொடர் பயிற்சி வகுப்பு பெரம்ப லூர் லட்சுமி மருத்துவமனை கூட்ட ரங்கில் நடைபெற்றது. மார்ச் 9 அன்று நடைபெற்ற நிறைவு வாரப் பயிற்சி வகுப்பிற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே.ராஜேந் திரன் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கலை யரசி வரவேற்றார். தமிழக விவசாயிகள் இயக்க வரலாறும், கம்யூனிஸ்ட்களின் பங்கும் என்ற தலைப்பில் தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடரா ஜன் கருத்துரை ஆற்றினார். நிகழ்ச்சியில் தேர்தல் நிதி 2 ஆவது தவணையாக ஒரு லட்சம் ரூபாயை சிபிஎம் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் என்.செல்லத்துரை, எஸ். அகஸ்டின், டாக்டர் சி.கருணா கரன், சிபிஎம் ஒன்றியச் செயலா ளர்கள் கருணாநிதி (பெரம்பலூர்), செல்லமுத்து (குன்னம்), சக்தி வேல் (செயலாளர்), செல்லத்துரை (ஆலத்தூர்), மாவட்டக் குழு உறுப் பினர்கள் பி.ரெங்கராஜ், மகேஸ் வரி, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் அகவி நன்றி கூறினார்.