பெரம்பலூர், மார்ச் 3 - பெரம்பலூர் மாவட்ட தீக்கதிர் வாசகர் வட்டம் சார்பில் மார்ச் 9 வரை வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மார்க்சிய தொடர் பயிற்சி வகுப்பு பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் நடை பெற்று வருகிறது. மார்ச் 3 அன்று நடைபெற்ற 7 ஆவது வார பயிற்சி வகுப்பிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ராமர் தலைமை வகித்தார். தொழிலாளர் கட்சி தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார். ‘இந்தியாவின் சமூக நீதி, கூட்டாட்சி, மதச்சார்பின்மை’ என்ற தலைப் பில் மாநில பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பி னரும் கவிஞர் எழுத்தாளருமான இரா.எட்வின் கருத்துரை ஆற்றினார். நிகழ்ச்சியில் வெள்ளுவாடியை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ராஜேந்திரன், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மைக் செட்டை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டக் குழு விற்கு நன்கொடையாக வழங்கினார். கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலா ளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளா ளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.