தஞ்சாவூர், டிச.24 - ஒவ்வொருவரும் தங்களது பிறந்த நாளில் மரக்கன்றுகளை நடலாம். இது போல, தமிழகத்தில் உள்ள 7 கோடி பேரும் மரக்கன்றுகளை நட்டால், 7 கோடி மரங்களாகும் என தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். தஞ்சையில் வனத்துறை சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடு துறை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளுடனான கலந்தாய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு தமிழக வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது: “ஈஷா யோகா மையம் குறித்து, ஏற்க னவே அளிக்கப்பட்ட அறிக்கையில், ஈஷா யோகா மையம் ஒரு சென்ட் நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை என அறிக்கை கொடுத்து உள்ளார்கள். மேலும் வனத்தை ஒட்டியுள்ள பகுதி களில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அறிக்கை அளித்ததும் தகவல் தெரி விக்கப்படும். தமிழ்நாட்டில் வனப்பரப்பு 23.98 சதவீதமாக உள்ளது. இதை 10 ஆண்டு களில் 33 சதவீதமாக விரிவுபடுத்த வேண்டும் என தமிழக முதல்வர் உத்தர விட்டுள்ளார். உலக அளவில் எந்த வித மான இயற்கை பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வனப்பரப்பு 33 சதவீதம் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்திலும் அதற்கான நட வடிக்கையை முதல்வர் தொடங்கி வைத் துள்ளார்.
எனவே, ஒவ்வொரு ஆண்டும் 2.65 கோடி மரங்களை நடுவதற்குத் திட்ட மிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகளில் 33 சதவீதப் பரப்பளவில் வனமாக்கலாம். இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறை, பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, கல்வித் துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்ப டுத்தப்படவுள்ளது. மேலும், வனத் துறை, வேளாண் துறை மூலம் மரக்கன்று கள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தங்களது பிறந்த நாளில் மரக்கன்றுகளை நடலாம். இது போல, தமிழகத்தில் உள்ள 7 கோடி பேரும் மரக்கன்றுகளை நட்டால், 7 கோடி மரங்களாகும். இது தொடர்பாக பள்ளிகளில் மாணவர்களிடையே ஆசிரி யர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஊருக்குள் குரங்குகள் வருவதைத் தடுப்பது தொடர்பாகக் குழு அமைத்து ஆய்வு செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, மயில், காட்டுப்பன்றிகள் வருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அமைச்சர் கூறினார். தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்கள் அசோக் உப்பி ரட்டி, சேகர்குமார் தீரஜ், தலைமை வனப் பாதுகாவலர் நாகநாதன், மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் செ.ராமலிங்கம், சட்டப் பேரவை உறுப்பினர்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.