மயிலாடுதுறை, ஜன.21- மயிலாடுதுறை அருகேயுள்ள சோழம் பேட்டை ஊராட்சியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதல்வரின் கனவுத் திட்டத்தால் உருவானது மாவட்ட அரசு மாதிரி பள்ளிகள் ஆகும். இதுபோன்ற மாவட்ட மாதிரி பள்ளிகளை நிறுவுவதற்கான முக்கிய நோக்கம். அரசு மாதிரி பள்ளி களில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண் கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை உறுதி செய்தல் மற்றும் ஒவ்வொரு மாணவரும் அறிவியல், தொழில்நுட்பம் பொறியியல் கலை மற்றும் மருத்துவம் ஆகிய துறை களில் படிப்பைத் தொடர முதன்மை நிறு வனங்களில் சேர்க்கை பெற முடியும். பள்ளி யில் அனைத்து வகுப்புகளுக்கும் ஸ்மார்ட் போர்டு பயன்படுத்தப்படுகிறது. இப்பள்ளி யானது உண்டு உறைவிட பள்ளியாகும். மாணவர்களுக்கு தேவையான அனைத்தும் பள்ளியில் வழங்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை வட்டம், சோழம் பேட்டை அரசு மாதிரிப் பள்ளியில் மொத்தம் 176 மாணவ, மாணவிகள் பயின்று வரு கின்றனர். இந்த அரசு மாதிரி பள்ளியினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் குடிநீர், கழிவறை, வகுப்பறைகளை ஆய்வு செய்து, வகுப்பறைகளை சுகாதாரமாக வும், கழிவறைகளை தொடர்ந்து தூய்மை யாக பராமரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மயிலாடுதுறை வட்டாட்சியர் சபீதா தேவி உடனிருந்தார்.