districts

img

அரசு அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிட ஆட்சியர் அறிவுறுத்தல்

பெரம்பலூர், செப்.30 - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட  அரங்கில் மாவட்ட ஆட்சியர்  கிரேஸ் பச்சாவ் தலைமை யில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் இருக்கும்  இடத்திற்கே வந்து அவர் களின் கோரிக்கை மனுக் களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். அத னைத் தொடர்ந்து, முதல மைச்சரின் தனிப்பிரிவு மனுக் கள், அமைச்சர் பெரு மக்கள் கலந்து கொண்ட  நிகழ்ச்சிகளில் பொதுமக்கள்  வழங்கிய கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்க ளில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் போன்ற நிகழ்வுகளில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்தும், ஒரு  மாதத்திற்கு மேலாக நட வடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்க ளையும், எடுக்கப்பட்டு வரும்  நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களிடம் கேட்டு, ஆட்சி யர் விரிவாக ஆய்வு மேற் கொண்டார். தொடர்ந்து, பொதுமக்க ளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னு ரிமை கொடுத்து அவற்றை நிறைவேற்றுவதற்கு அரசு  அலுவலர்கள் முழு அர்ப்ப ணிப்பு உணர்வுடன் பணி யாற்றிட வேண்டும் என அலு வலர்களுக்கு அறிவுறுத்தி னார். திங்களன்று நடந்த கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து 414 மனுக்கள் பெறப்பட்டன.