districts

img

கேலோ விளையாட்டில் வென்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

புதுக்கோட்டை, பிப்.5 - கேலோ இந்தியா இளை யோர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற புதுக்கோட்டை மாவட்டத் தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, திங்கள் கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினார். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்  ந.கிஷோர் மிதிவண்டி போட்டியில் 80 கி.மீ. பிரிவில்  தங்கமும், ஒரு கி.மீ. பிரி வில் வெண்கலப் பதக்கமும்,  வீராங்கனை எம்.ஜீவா  குத்துச்சண்டை போட்டியில் 57-60 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத் துள்ளனர்.  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் து.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.