மயிலாடுதுறை, அக்.16- மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்துரையாடி ஊக்கவுரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் உரையாடிய திலிருந்து.... மாணவ, மாணவிகள் கல்வியின் முக்கி யத்துவத்தை அறிந்து அதன்படி செயல்பட வேண்டும். பள்ளி பாடங்களை தொடர்ந்து கற்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல் பட்டால் வாழ்க்கையில் உயரலாம். வினா- விடை கையேடுகளை பயன்படுத்தி கொண்டு பொது தேர்விற்கு தயாராக வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தின் போட்டித்தேர்வு மற்றும் குடிமை பணி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு தினசரி செய்தித் தாள்களை வாசித்து பழக வேண்டும். செய்திகள் வாசிப்பதனால் அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும். மாணவர்கள் கற்றல் திறனை வளர்த்து கொள்ள வேண் டும். வாழ்க்கையின் தரம் உயர, கல்வி இன்றியமையாதது என்பதை அறிந்து நன்கு கல்வி பயின்று பெற்றோருக்கும், சமுதாயத் திற்கும் பெருமையை தேடி தர வேண்டும் என்றார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வினா-விடை கையேடு உரு வாக்கிய பாட வல்லுநர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். நிகழ்வின்போது முதன்மை கல்வி அலு வலர் ஜெகநாதன், முதன்மை கல்வி அலுவ லரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணி யன், தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ், செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் மீனா, மஞ்சுளா ஆகியோர் உடனி ருந்தனர்.