districts

img

தண்ணீர் பஞ்சம் இருக்காது!

கோவை, டிச.12- இந்த வருடம் கோவை யில் தண்ணீர் பிரச்சனையே இருக்காது என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார். கோவை மாவட்டம், சூலூர், காங்கேயம் பாளை யத்தில் உள்ள தனியார்  மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் புதனன்று நடைபெற் றது. இதனை மாவட்ட ஆட் சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். இதில், ரூ. 1.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பொது மக்களிடம் மாவட்ட ஆட்சி யர், 171  மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பேசிய ஆட்சியர், மக்கள் தொடர்பு முகாமில் பெறப் படக்கூடிய அனைத்து மனுக் களுக்கு 28 நாட்களில் தீர்வு  காணப்பட்டு வருகிறது. பில் லூர் அணையிலிருந்து குடி நீர் கொண்டுவரப்படுகிறது அங்கும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. ஆகவே இந்த வருடம் கோவையில் தண்ணீர் பிரச்சனை இருக் காது, என்றார்.