districts

img

மாநிலப் பதிவாளரைக் கண்டித்து கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, மார்ச்.7-  மாநிலப் பதிவாளரின் ஊழியர் விதோரதப் போக்கைக் கண்டித்து தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டுறவுத் துறையில் 33 இளநிலை ஆய்வா ளர்களுக்கு  முதுநிலை ஆய்வாளராக பதவி உயர்வு  அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு  சொந்த மாவட்டத்திலேயே காலிப்பணியிடங்கள் இருந்தும் அந்தந்த மாவட்டத்தில் பணி நியமனம் செய்யாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பதவி உயர்வு பெற்று வேறு மாவட்டங்களுக்கு செல்லும் ஊழியர்கள் பொரு ளாதார இழப்பையும், கடுமையான மன உளைச்சலை யும் சந்திக்க உள்ளனர். எனவே, இப்பணி மாறுதலை ரத்துசெய்து, அந்தந்த மாவட்டங்களிலேயே பணிய மர்த்த வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.வினிதா தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி மாநிலச் செயலாளர் வி.ஏ.கே. மனோகரன் உரையாற்றினார். மாவட்டப் பொருளா ளர் ஆர்.சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.