districts

img

ஏற்காட்டில் சிஐடியு புதிய கிளை

சேலம் ஜூலை 08- ஏற்காடு பகுதியில் சிஐடியு-வின் புதிய கிளை துவக்க விழா ஒண்டிக்கடை படகு இல்ல பகுதியில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) ஏற்காடு பகுதியில் சேலம் டிஸ்ட்ரிக்ட் ஜென்ரல் லேபர் யூனியன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்காடு சுற்றுலா படகு தொழி லாளர் சங்கம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. மரகத ஏரி படகு இல்ல பகுதியில் புதிதாக துவங்கப்பட்ட கிளை பெயர் பலகை திறப்பு, கொடியேற்று விழா நடைபெற்றது.  கிளை தலைவர் மாதேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நி கழ்வில், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வெங்க டபதி கொடியேற்றி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந் தன், மாவட்டத் தலைவர் டி.உதயகுமார் ஆகியோர் பெயர் பல கையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். இதில்,  சிஐடியு உதவிச் செயலாளர் சி.கருப்பண்ணன், ஆட்டோ சங்கச் செயலா ளர் உதயகுமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.