districts

img

மார்ச் 28, 29 வேலை நிறுத்தத்தை விளக்கி சிஐடியு பிரச்சாரம்

பொன்னமராவதி, மார்ச்.25- மார்ச் 28, 29 தேதிகளில் நடை பெறும் அகில இந்திய வேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தை விளக்கி பொன்னமராவதியில் சிஐடியு சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற பிரச்சாரத்திற்கு வி.ஆர்.எம்.சாத்தையா தலைமை வகித்தார. சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கண்ணன், சௌந்தரம், ஒய்யம்மாள், பஞ்சவர்ணம், வி.எஸ்.ஆர்.கனி, தீன், அனைத்து போக்குவரத்து சங்க பாஸ்கர், ஆட்டோ சங்க கிருஷ்ணன், அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் மணிவேல், கண்ணன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சி.அன்புமணவாளன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன் கோரிக்கைகள் குறித்து பேசினர். பிரச்சாரத்தில், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும், மின்சார திருத்தச்சட்டம் 2020 ஐ திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது, பொன்னமராவதியில் சாலையோர வியாபாரிகளை பாதுகாக்க குறைந்த அளவான ஆண்டு கட்டணம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

குடவாசல் 
அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை விளக்கி அனைத்து கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் குடவாசல் வட்டாட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விளக்க கூட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெ.சோமசுந்தரம் தலைமையேற்று பேசினார். மாநில செயலாளர் எஸ்.கோதண்டபாணி விளக்க உரையாற்றினார். இதில் மாவட்டச் செயலாளர் சி.பிரகாஷ், முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.ராஜமாணிக்கம், மாவட்ட நிர்வாகிகள் ஏ.பாலசுப்பிரமணியன், வீ.தெட்சிணாமூர்த்தி, ராஜசேகர், வட்ட கிளை தலைவர் விக்னேஸ்வரன், செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்
தஞ்சையில், அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பிரச்சார இயக்கம், தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் நிக்கல்சன் கூட்டுறவு வங்கி அருகில் தொடங்கிய பிரச்சார இயக்கத்திற்கு, சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் என்.மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.  பிரச்சார இயக்கம் காவேரி சிறப்பங்காடி, கீழவாசல், ரயிலடி, அண்ணாநகர், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு, ஈ.டி.எஸ்.மூர்த்தி, பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் துணைத் தலைவர் சத்தியநாதன், வங்கி ஊழியர் சங்கத் தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் அன்பழகன், விரைவு போக்குவரத்து சங்கம் வெங்கடேசன், செங்குட்டுவன், அரசு போக்குவரத்து சங்கம் ராமசாமி, ஏஐடியுசி நிர்வாகிகள் சி.சந்திரகுமார், சேவையா, துரை.மதிவாணன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.