districts

img

சிஐடியு ஆட்டோ சங்க புதிய கிளை துவக்கம்

திருச்சி புறநகர் மாவட்டம் மணப்பாறை பொத்தமேட்டுபட்டியில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்க புதிய கிளை துவக்க விழா ஞாயிறன்று நடைபெற்றது. விழாவிற்கு புதிய கிளைச் செயலாளர் ஆசிர்வாதம் தலைமை வகித்தார். சங்கப் பெயர்ப் பலகையை ஆட்டோ சங்க புறநகர் மாவட்டப் பொருளாளர் சம்பத் திறந்து வைத்தார். சங்கக் கொடியை கிளைத் தலைவர் பரமேஸ்வரி ஏற்றி வைத்தார். கிளை பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சிவராஜ், வட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், சிஐடியு ஆட்டோ  சங்க மாவட்டத் தலைவர் நவமணி, மணப்பாறை சிபிஎம் வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஆட்டோ சங்க சட்ட ஆலோசகர் ஆனந்தகுமார் உள்பட பலர் கொண்டனர்.