அரியலூர், பிப்.20 - அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு தொ டர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப் பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ஜா. ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து வீதி நாடகத்தினை தொடக்கி வைத்தார். அப்போது அவர் தெரிவிக்கை யில், “ஆண்டிமடம் வட்டாரம் வளர்ச்சி யினை எதிர்நோக்கும் வட்டாரமாக உள்ளது. சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களான குழந்தை திரு மணம், குழந்தை கடத்தல், குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடை பெறாமல் தடுப்பதற்கான இந்த விழிப்பு ணர்வு பிரச்சார வாகனம் தொடக்கி வைக்கப்படுகிறது. வட்டாரத்திலுள்ள அனைத்து பொதுமக்களும் வீதி நாடகத்தினை கண்டு விழிப்புணர்வு அடைந்து, குழந் தைகளுக்கு எதிரான பிரச்சனைகளை தடுத்திட உதவிபுரிய வேண்டும். இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டத்தில் 20 இடங்களை தேர்வு செய்து நடத்தப் படுகிறது. பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் உடனடி யாக 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைத்து குழந்தைகள் பாது காப்பினை உறுதி செய்ய வேண்டும்” என்றார். பின்னர் அவர் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் விழிப்பு ணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.