அறந்தாங்கி, மே 8- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா வைரிவயல் கிராமத்தில் உள்ள வீர முனி ஆண்டவர் கோவில் 84 ஆம் ஆண்டு சந்தன காப்பு உற்சவத்தையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடை பெற்றது. இந்த பந்தயம் காலை மற்றும் மாலை என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. காலை யில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, கரிசான் குதிரை, பூஞ்சிட்டு குதிரை என 4 பிரிவுகளாகவும், மாலையில் நடுமாடு, பூஞ்சிட்டுமாடு, நடுகுதிரை என 3 பிரிவுகளாகவும் பந்தயம் நடை பெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டி களும், 120- க்கும் மேற்பட்ட குதிரைகளும் கலந்து கொண்டன.போட்டியைக் காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்திருந்தனர். பந்தயத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரூ.6.17 லட்சம் ரொக்கப் பரிசும் கோப்பை களும் வழங்கப்பட்டன.