அறந்தாங்கி, ஜன.5 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவில் பகுதியில் மணல் குவாரி அமைத்து தரக்கோரி மாட்டு வண்டி தொழிலா ளர்களின் காத்திருப்பு போராட்டம் நடைபெற் றது. மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ் வாதாரத்தை பாதுகாத்திட பொதுப் பணித் துறை மற்றும் கனிமவளத் துறையால் மணல் குவாரி அமைக்க நில அளவை செய்த இடத் தில் மணல் குவாரி அமைத்து தரக் கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட் டம் நடத்தினர். மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சி.பி.சந்தானம் தலைமை யில் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு ஒருங்கிணைப்பா ளர்கள் பழனிச்சாமி, இளையராஜா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.ஸ்ரீதர் கோரிக்கையை விளக்கிப் பேசுகையில், ஆவு டையார்கோவில் பகுதியில் உள்ள வெள்ளாற் றில் மணல் குவாரி அமைக்க வேண்டும். ஆவு டையார் கோவில் தாலுகா பகுதியில் நூற்றுக் கணக்கான மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாத நிலையில், தொழி லாளர்களுக்கு அவர்களுடைய வாழ்வாதா ரத்தை அரசுதான் பாதுகாத்திட வேண்டும். மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உடனே வெள்ளாற்று பகுதியில் ஏற்க னவே அளவீடு செய்யப்பட்ட இடத்தில் மணல் குவாரி அமைத்து தர வேண்டும் என்றார். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் சி.சுப்பி ரமணியன், சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் நெருப்பு முருகேஷ், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கலந்தர், சிஐடியு பொறுப்பாளர் கூத்தபெருமாள் உட்பட நூற்றுக் கணக்கான மாட்டுவண்டி தொழிலாளர்கள் பங்கேற்றனர்.