அறந்தாங்கி, ஜன.6 - போதிய மழை இல்லாததாலும், மேட்டூரிலிருந்து உரிய தண்ணீரை காவிரிக்கு தராததாலும் டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் காய்ந்து கருகிக் கொண்டிருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி, ஆவுடையார்கோவில், மண மேல்குடி, கரம்பக்குடி, கந்தர்வ கோட்டை ஆகிய பகுதிகளில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காவிரி டெல்டா பாசனம் செய்யப்படுகிறது. இதில் அறந்தாங்கியில், 10 ஆயி ரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகு படி செய்யப்பட்டிருக்கிறது. இதில் நேரடி பாசன பகுதிக்கு, காவிரியி லிருந்து மேட்டூர் தண்ணீர் வராத தால் பயிர்கள் பட்டுப் போய் கருகி யுள்ளன. கடைமடை பகுதிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் 25 சதவீத பயிர்களை காப்பாற் றலாம். தண்ணீர் திறக்காவிட்டால் 100 சதவீத பயிர்களும் காய்ந்து கருகி விடும். தமிழக அரசு உடனடியாக மேட்டூ ரில் இருந்து காவிரிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகளும், தமிழ்நாடு விவசாய சங்கமும் கோரிக்கை வைத் துள்ளது. மேலும் உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு, பயிர் காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். பாபநாசம் ஆழ்குழாய் கிணறு மற்றும் வட கிழக்கு பருவமழையை நம்பி டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆயிரக்கணக் கான ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்தனர். இதற்கிடை யில் மேட்டூர் அணை மூடப்பட்டது. வட கிழக்கு பருவமழையும் பொய்த்துப் போனது. இதனால் சம்பா, தாளடி நெல் வயல்கள் போதிய தண்ணீர் இன்றி, வெடிப்பு ஏற்பட்டு, பயிர்கள் வாடத் தொடங்கியுள்ளன. எனவே பாசனத்திற் காக மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூரி லிருந்து தண்ணீர் திறக்காவிட்டால், பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என சம்பா சாகுபடி செய்த விவசாயி கள் வேதனை தெரிவிக்கின்றனர்.