திருவாரூர், ஜன.20 - ஆடு அடிக்கும் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டு மென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளதாவது: திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூ ராட்சி பொது நிதியில் இருந்து கடந்த 2011-12 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளில் பள்ளி வாசல் அருகே 18 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் (இறைச்சி மார்க்கெட்) ஆடு அடிக்கும் தொட்டியுடன் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. ஆனால், இந்த கடைகள் மற்றும் ஆடு அடிக்கும் தொட்டி கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வணிக வளா கத்தில் உள்ள இறைச்சி கடைகள் பயன் பாட்டுக்கு வந்துள்ளன. இந்நிலையில் 2015 -16 நிதியாண்டில் கட்டப்பட்ட ஆடு அடிக்கும் தொட்டி தற்போது வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆடு களை வெட்டுவதற்கு முன்பாக சுகாதார ஆய்வாளர் ஆய்வு செய்து ஆடுகளை வெட்ட வேண்டும். ஆனால் இந்நடைமுறையை பின்பற்றுவதாக தெரியவில்லை. மேலும் குடவாசல் ஒகை பகுதியில் இருந்து அத்திக்கடை வரை பல இடங்க ளில், மீன் கடைகள் மற்றும் ஆட்டு இறைச்சி கடைகள் சாலை ஓரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆடுகளை சாலை ஓரத்திலேயே வைத்து அறுக்கும் போது அவ்வழியாக செல்லும் பொதுமக்களும் மாணவர்களும் அச்சத்துடன், அரு வருப்பாக பார்த்து செல்கிற நிலையும் உள்ளது. எனவே சுகாதாரமான முறையில் இறைச்சிகளை விற்பனை செய்ய, சாலை ஓரங்களில் உள்ள அனைத்து கடைகளை யும் இறைச்சி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார ஆய்வா ளர் ஆடுகளை ஆய்வு செய்த பின்னரே, இறைச்சிகள் விற்கப்பட வேண்டும். ஆடு அடிக்கும் தொட்டியை சீர் செய்து பயன் பாட்டுக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.