திருச்சிராப்பள்ளி, பிப்.13- பொன்னி இலக்கியத் திருவிழா போட்டி கள் நடைபெற உள்ளதாக திருச்சிராப் பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ் ஆட்சிமொழி திட்டத்தை 2022 ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயற்படுத்திய சிறந்த மூன்று மாவட்டங் களில் ஒன்றாக திருச்சி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக கடந்த ஆண்டு நடந்த மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதல் வர் ரூ.2.25 லட்சம் பரிசுத்தொகை, கேட யம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார். ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் திருச்சி சிறந்த மாவட்டமாக தேர்வு செய்யப் பட்டதை முன்னிட்டு பொன்னி இலக்கியத் திருவிழா என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இலக்கியத் திருவிழாவையொட்டி, பள்ளிக் கல்வித்துறை மூலமாக மாவட்டத் திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாண வர்கள், மாணவியருக்கு இடையே வினாடி -வினா போட்டி பிப்.16 அன்று காலை 10 மணியளவில் தெப்பக்குளம், பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ஒரு பள்ளிக்கு இரண்டு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள லாம். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நூல் வழங்கப்பட்டு, அவர்கள் அதை வாசித்த பின்னர், அந்தநூலில் இருந்து வினா கேட்கப்படும். அதில் சிறந்த முறை யில் பதில் சொல்லும் மாணவர்கள் பரிசு பெறுவர். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ.5 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.3 ஆயிரம் வீதம் வழங்கப்படும். கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் மூலமாக மாவட்டத்திலுள்ள கல்லூரி களில் பயிலும் மாணவர்களிடையே படம் பார்த்து கவிதை எழுதும் போட்டி மற்றும் படம் பார்த்து கட்டுரை எழுதும் போட்டிகள் மாவட்ட மைய நூலகத்தில் பிப்.16 அன்று காலை 10 மணியளவில் நடைபெறும். இதில் ஒரு கல்லூரியில் இருந்து,
ஒரு போட்டியில் இரண்டு மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ.15 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ.10 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும். மேலும் பொது நூலகத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக பொது மக்களுக்கு சிறுகதை எழுதும் போட்டி பிப்.16 அன்று காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும். போட்டி தொடங்கும் நேரத்தில் ஒரு சிறு கதையின் இரண்டு அல்லது மூன்று வரி களில் கதை ஆரம்பிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். இதன் தொடர்ச்சியாக சிறு கதை எழுத வேண்டும். இப்போட்டியில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ.5 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.3 ஆயிரம் வீதம் பரிசுகள் வழங்கப் படும். போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு பிப்.23 அன்று கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சி யர் தலைமையில் நடைபெறும் பொன்னி இலக்கியத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி யில் பரிசுகள் வழங்கப்படும். நிறைவு நாள் விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சொற்பொழிவு, கவிஞர் நந்தலாலா தலைமையில் பட்டி மன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடை பெறும். இந்நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள், தமிழ்ச்செம்மல் விருதாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்” என்றார்.