districts

img

வடக்கூரில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்

அறந்தாங்கி, ஆக.11 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் உள்ள வடக்கூர் முத்துமாரியம்மன் கோவில் 48 ஆம் நாள் மண்டல பூஜையையொட்டி, வடக்கூர் இளைஞர்கள் சார்பாக  முதலாம் ஆண்டு மாட்டுவண்டி  எல்கை பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை, திருச்சி,  தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாத புரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. பெரிய  மாடு, சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டின்  உரிமையாளர்களுக்கு ரூ.1.2 லட்சம் ரொக்கப்  பரிசும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.