கந்தர்வகோட்டை, மார்ச் 18 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் மூக்கப்ப உடையார் பள்ளம் கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு துளிர் திறனறி வுத் தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. துளிர் திறனறிவுத் தேர்வு குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டார செயலாளர் ரஹ்மத்துல்லா பேசி னார். மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு களுக்கான பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.