districts

img

பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் பெருந்திரள் தர்ணா

திருச்சிராப்பள்ளி, மே 18-

   பிஎஸ்என்எல்இயு, ஏஐ பிடிபிஏ, டிஎன்டிசிடபுள்யுசி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வியாழனன்று பிஎஸ்என்எல் திருச்சி மண்  டல பொதுமேலாளர் அலு வலக வளாகத்தில் பெருந் திரள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.  

   பிஎஸ்என்எல் திருச்சி மண்டல பொதுமேலாளர் அலுவலகம் மற்றும் டி  டேக்ஸ் பில்டிங்கில் லிப்ட்  வசதி செய்து தர வேண்டும்,  மன்னார்புரம் பி.டி காலனி ஊழியர் குடியிருப்பில் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். பொதுமேலாளர் அலுவலக சிஎஸ்சியில் வாடிக்கையாளர்களுக்கு மின்விசிறி மற்றும் குடி தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். கரூர் சிஎஸ்சியில் பர்னிச்சர் மற்றும் பிரிண்டர்  வசதி செய்து தர வேண்டும். கான்ட்ராக்ட் ஊழியர் களுக்கு நீதிமன்ற தீர்ப்புப்  படி வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், முசிறி பகுதியில் பெண்க ளுக்கு ஓய்வறை மற்றும் உணவறை வசதிகளை செய்து தரவேண்டும். ஓய்வூ தியர்களுக்கு (குடும்ப ஓய்வூதியர்களுக்கு) வித்த வுட் வவுச்சர் ஆப்சன் கொடுப்பதை நிராகரிக்கக் கூடாது, கரூர் பகுதியில் உள்ள ஏடிடிக்களை முறை யாக பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா நடைபெற்றது.

   போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர்கள் பிஎஸ்என்எல்இயு முரு கேசன், ஏஐபிடிபிஏ, ஜான் பாஷா, டிஎன்டிசிடபுள்யுசி சுந்தரராஜு ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர்கள் ஜி.சுந்தரராஜு, சின்னையன், முபாரக்அலி, மாவட்டப் பொருளாளர்கள் கோபி,  அன்பழகன், சண்முகம் ஆகி யோர் விளக்கிப் பேசினர். இதில் அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.