districts

img

பட்டுக்கோட்டையில் புத்தகக் கண்காட்சி

பட்டுக்கோட்டை, ஏப்.24-  

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பேருந்து நிலையம் அருகே, பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு, உலக புத்தக தினத்தை முன்னிட்டு, வாசிப்பை அதிகப்படுத்தும் நோக்கத்துடன், பாரதி புத்த காலயம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது.  இதில் பல்வேறு  வகையான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள்,  பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.