சேதுபாவாசத்திரம் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
தஞ்சாவூர், ஆக.20- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ரெட்டவயல் ஊராட்சியில் மக்களு டன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் செவ் வாய்க்கிழமை நடை பெற்றது. இதில், சட்டப்பே ரவை உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து, முகாமைத் துவக்கி வைத்துப் பேசி னார். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். ஆழ்துளைக் கிணறு ரெட்டவயல் ஊராட்சி யில் சட்டமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு மற்றும் குடிநீர் இணைப்பு வசதி ஆகியவற்றை சட்டப்பேரவை உறுப்பி னர் நா.அசோக் குமார் தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவமனை பெருமகளூர் பேரூ ராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கட்டப்பட்ட அரசு கால்நடை மருந்தகத்தை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத் ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பி னர் நா.அசோக்குமார் குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வந்தார்.
ஜே.சி. குமரப்பா பள்ளியில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா
தஞ்சாவூர், ஆக.20- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே. ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் (ஜே.ஆர்.சி) சார்பில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா நடந்தது. பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து, ஜே.ஆர்.சி கொடியை ஏற்றி வைத்தார். ஒருங்கிணைப் பாளர் சத்தியமூர்த்தி வர வேற்றார். தமிழ்நாடு தனி யார் பள்ளிகள் தாளா ளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் விழாவை தொடங்கி வைத்தார். பேராவூரணி ஒன்றியத் திற்கு உட்பட்ட 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு பேச்சு, கட்டுரை, ஓவியம், பாட்டு, நடனம் ஆகிய போட்டி யில் கலந்து கொண்டனர். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன. ஜே. ஆர்.சி மாவட்ட அமைப் பாளர் பிச்சைமணி ஜெனிவா ஒப்பந்த நாள் பற்றி மாணவர்களிடம் விளக்கி பேசினார். இதில் வட்டார வள மைய மேற்பார்வையா ளர் கோகுலகிருஷ்ணன், ஆசிரியர்கள், மாண வர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இணை ஒருங்கி ணைப்பாளர் சேகர் நன்றி கூறினார்.
மீன்வளப் பல்கலை. நுழைவுவாயில், கட்டடங்கள் திறப்பு
ஆட்சியர், நாகைமாலி எம்எல்ஏ ஆய்வு
நாகப்பட்டினம், ஆக.20 - நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் உழவர் பயிற்சி மையக் கட்டடம், நுழைவு வளைவு கட்டுமானம் மற்றும் இருபுறமும் தடுப்புச் சுவருடன் கூடிய கான்கிரீட் சாலை ஆகியவற்றை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் பார்வையிட்டனர். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை சார்பில் 2021-2022 தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் நிதி உதவியுடன் ரூ.12,82,57,000/- மதிப்பீட்டில் 8506 சதுர அடி பரப்பளவில் உழவர் பயிற்சி மையக் கட்டடம், நுழைவு வளைவு கட்டுமானம் மற்றும் 1210 மீட்டர் நீளத்தில், இருபுறமும் தடுப்புச்சுவருடன் கூடிய கான்கிரீட் சாலை ஆகியன கட்டப்பட்டுள்ளன. இந்த உழவர் பயிற்சி மையக் கட்டடத்தில் பயிற்சிக் கூடம், ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனி தங்கும் அறைகள். விடுதி பாதுகாவலர் அறை மற்றும் நவீன கழிப்பறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி திறந்து வைத்ததையடுத்து. மாவட்ட ஆட்சியர், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழக விரிவாக்க கல்வி இயக்குநர் முனைவர் கே.வீரபத்திரன், மீன்வளப் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் முகமது தன்வீர் மற்றும் பல்கலைக்கழக அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கைதி தப்பியோட்டம் 2 காவலர்கள் பணியிடை நீக்கம்
தஞ்சாவூர், ஆக.20 - தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பியோடியதால், காவ லுக்கு இருந்த 2 காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை பணி யிடை நீக்கம் செய்யப்பட்டனர். தஞ்சாவூர் அருகே தளவாய்ப்பாளையம் வெங்க டேஸ்வரா நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் வீடு ஆக.16 ஆம் தேதி இரவு பூட்டப்பட்டிருந்தது. அப்போது வீட்டுக்கு வந்த ரவிச்சந்திரனின் மகன் சுந்தரேசன் (24) பின் பக்கம் சத்தம் கேட்டதால் சென்று பார்த்தார். அங்கு இளைஞர் திருடுவதற்காக பின் பக்கக் கதவை உடைக்கும் முயற்சி யில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை சுந்தரேசன் பிடிக்க முயன்றபோது, அந்த நபர் தள்ளிவிட்டு ஓடினார். பின்னர், அக்கம்பக்கத்தினர் சேர்ந்து அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்து தாக்கி னர். இதையடுத்து, அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணை யில், அவர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கோனி மேடைச் சேர்ந்த சுமன் (29) என்பது தெரிய வந்தது. பலத்த காயமடைந்த நிலையில் இருந்த சுமனை, காவல் துறை யினர் அறிவுறுத்தலின் பேரில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்த்தனர். இவருக்கு அம்மாபேட்டை காவல் நிலைய காவலர்கள் மதுசூதனன், கார்த்திகேயன் காவலுக்கு இருந்தனர். சிகிச்சையில் இருந்த சுமன் மருத்துவமனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை தப்பியோடிவிட்டார். இது தொ டர்பாக காவலர்கள் மதுசூதனன், கார்த்திகேயனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணி யிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கடன் தொல்லை ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயன்ற வியாபாரி மீட்பு
தஞ்சாவூர், ஆக.20 - கடன் பிரச்னை காரணமாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யரகத்தில் தீக்குளிக்க முயன்ற வியாபாரியைக் காவல் துறையினர் மீட்டனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சிலர் தற்கொலைக்கு முயற்சி செய்வதால், காவல்துறை பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியரகத் துக்கு மனு அளிக்க வரும் அனைவரிடமும் தண்ணீர் கேன் உள்ளிட்ட அனைத்து உடைமைகளையும் காவல் துறையி னர் கடும் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித் தனர். இதையும் மீறி ஆட்சியரக வளாகத்துக்குள் கேனுடன் நுழைந்த ஒருவர் திடீரென தனது உடலில் டீசலை ஊற்றிக் கொண்டார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் சென்று அவரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், அவர் பூதலூர் வட்டத்துக்கு உள்பட்ட கங்கைசமுத்திரத்தைச் சேர்ந்த ஏ.சுந்தர்ராஜ் (53) என்பதும், இவர் தஞ்சாவூர் கல்லுக்குளத்தில் கடை வைத்து வர்ணப்பூச்சு வியாபாரம் செய்து வருவதும் தெரிய வந்தது. மேலும், இவர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ. 3.50 லட்சம் கடன் வாங்கினார். இதற்கு நாள்தோறும் ரூ. 1,500 வட்டி செலுத்தி வருகிறார். இதனிடையே, ஜனவரி மாதம் முதல் உடல் நிலை பாதிப்பு காரணமாக இவரால் கடன் தொகையைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. இந்நிலையில் சுந்தர்ராஜை கடன் கொடுத்த நபர் தொடர்ந்து மிரட்டி துன்புறுத்தி வருகிறாராம். இதனால் மனமுடைந்த சுந்தர்ராஜ் தற்கொலை செய்து கொள்வதற் காக தனது உடலில் டீசலை ஊற்றிக் கொண்டது விசார ணையில் தெரிய வந்தது. இதையடுத்து, சுந்தர்ராஜை தமிழ்ப் பல்கலைக்கழ கக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவல்து றையினர் அவருக்கு அறிவுரை கூறி, தொடர்புடைய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து அனுப்பி வைத்தனர்.
காதலர்களை மிரட்டி பணம் பறிப்பு: 4 பேர் கைது
தஞ்சாவூர், ஆக.20 - காதலர்களை மிரட்டி கூகுள் பே மூலம் ரூ. 3 ஆயிரம் பறித்த 4 பேரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் செவி லியர்களாகப் பணியாற்றி வரும் 24 வயது இளைஞரும், இளம்பெண் ஒருவரும் காதலித்து வருகின்றனர். திருமா னூரிலுள்ள காதலியை வீட்டில் விடுவதற்காக காதலர் மோட்டார் சைக்கிளில் ஆக.16 அன்று இரவு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். தஞ்சாவூர் அருகே புறவழிச்சாலையில் எட்டாம் நம்பர் கரம்பை பகுதியில் சென்றபோது அங்கு வந்த 5 பேர் இருவரையும் பணம் கேட்டு மிரட்டினர். இருவரும் கையில் பணம் இல்லை எனக் கூறியும் விடவில்லை. யாரிடமாவது கூகுள் பே மூலம் பணத்தைப் பெற்று எங்களுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறினர். இதனால், காதலி தனது அக்காவுக்கு கைப்பேசி மூலம் பேசி ரூ.3 ஆயிரத்தை கூகுள் பே மூலம் பெற்று, மிரட்டிய அந்நபர்களுக்கு அனுப்பினார். இதையடுத்து, அவர்கள் இருவரையும் விட்டுச் சென்றனர். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அப்பகுதியிலுள்ள வடகால் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்ற ஜெய் ஆகாஷ் (24), மணிகண்டன் (27), வல்லரசன் (21), சார்லஸ் (29), ரெட்டிபாளையம் சாலை சிங்கபெரு மாள் குளம் பகுதியைச் சேர்ந்த விக்கி ஆகியோர் இச்சம்ப வத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, ஜெய் ஆகாஷ், மணிகண்டன், வல்லரசன், சார்லஸ் ஆகியோரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்த னர். விக்கியை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கு பெண் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
தஞ்சாவூர், ஆக.20 - பெண் கும்பல் பாலியல் வல்லுறவு வழக்கு தொடர்பாக பாப்பாநாடு காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், 10 நாள்களுக்கு முன்பு கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். இது குறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து 17 வயது சிறு வன் உள்பட 4 பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பாப்பா நாடு காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற் காக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்றார். அங்கு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வா ளர் சூர்யா இப்பெண்ணிடம் புகார் மனுவை பெறாமல், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி அலைக் கழித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறை உயர் அலு வலர்கள் நடத்திய விசாரணையில், காவல் நிலையத்துக்கு வந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக சட்ட உதவி வழங்காமல் அவரை அலைக்கழித்ததாகவும், உயர் அலுவலர் களுக்கு தகவல் தெரிவிக்காமல் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகவும் கூறி உதவி ஆய்வாளர் சூர்யா, தஞ்சாவூர் ஆயுதப் படைக்கு சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இவரை தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
நியாயமான வாடகை நிர்ணயிக்க அடிமனை பயனாளிகள் வேண்டுகோள்
திருவாரூர், ஆக.20 - நியாயமான வாடகை நிர்ணயிக்க வேண்டுமென அடிமனை பயனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீசுந்தரேஸ்வரர் அன்ன பூரணி அம்மன் திருக்கோயில் இடத்தில் பல தலைமுறையாக குடியிருந்து வருபவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என குறிப்பிட்டு இடத்தை காலிச் செய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதைக் கண்டித்தும், நியாயமான வாட கையை நிர்ணயிக்கக் கோரியும் திருப்பணிப் பேட்டை, காவாலக்குடி திருக்கோயில் செயல் அலுவலர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசா யிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஜி.துரைராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநிலப் பொருளாளர் எஸ்.துரைராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் எம்.சேகர், தலைவர் எஸ்.தம்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கே.தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலாளர் கே.செந்தில் மற்றும் பயனாளி கள் கலந்து கொண்டனர். புதிய வாடகை நிர்ணயிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள் வெளி வரும் வரை, உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த பயனாளிகளை கட்டாயப்படுத்தக் கூடாது. அரசாணை 318-ஐ செயல்படுத்திட உடனடியாக சட்ட ரீதியான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். பல தலை முறைகளாக அடிமனைகளில் வீடுகள், சிறு கடைகள் கட்டி பயன்படுத்தி வருபவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயரில் இடத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை களை கைவிட வேண்டும். காலம் காலமாக கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் ஏழை விவசாயிகளை, மறு ஏலம் என்ற பெயரில் நிலத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். குத்தகை விவசாயிகளுக்கு ஆர்டிஆர் (Record of Tenent Rights) பதிவு செய்து தர வேண்டும். அறநிலைய சட்டப்பிரிவு 34-ன்படி பல தலைமுறைகளாக குடியிருப்பவர்கள், சாகு படி செய்யும் விவசாயிகளுக்கு அந்தந்த இடங் களுக்கு நியாயமான விலையை தீர்மா னித்து அவர்களுக்கு சொந்தமாக்கிட வேண் டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான கட்டி டங்களில் சிறு, குறு கடை வைத்து வணிகம் செய்து வரும் பயனாளிகளுக்கான வாடகை நிர்ணயம் சந்தை மதிப்பீட்டின்படி தீர்மானிக் காமல் அவர்களின் வணிக நிலைமைகளை கணக்கில் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.