சிதம்பரம், அக்.18- சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக் கழக இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் வேளாண்மை துறை மாணவ பிரதிநிதிகள் ரத்ததான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட னர். அண்ணாமலைப் பல்கலைக் கழக இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.ராஜ் பிரவீன் தனது அறிமுக உரையில், “இளையோர் செஞ்சிலுவை சங்கத்தில் மாணவர்கள் தங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தங்களது ஆளுமை திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும்” என்றார். பல்கலைக்கழக வேளாண்மை துறை முதல்வர் (பொறுப்பு) முனைவர். ஈஸ்வரன் தலைமை வகித்தார். சமூக சேவையாளர் விருது பெற்ற ச. ராமச்சந்திரன், வேளாண் மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை தலைவர். முனைவர். ஆ.ஏ.ஸ்ரீராமச்சந்திர சேகரன், முனைவர். நு.சந்திர மௌலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.