திருப்பூர், செப்.23- 44 தொழிலாளர் நல சட் டங்களை 4 தொகுப்புகளாக திருத்தம் செய்துள்ள ஒன் றிய அரசை கண்டித்து திங்க ளன்று அனைத்து தொழிற் சங்கத்தினர் திருப்பூரில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப் பாட்டம் நடத்தினர். திருப்பூர் குமரன் சிலை முன்பு ஐஎன்டியுசி மாவட்டப் பொருளாளர் கோபாலசாமி தலைமையில் மத்திய தொழிற்சங்கத்தினர் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஒன்றிய அரசு 44 தொழிலாளர் நல சட்டங் களை 4 தொகுப்புகளாக திருத்தம் செய்ததை கண்டித்து முழக்கங்கள் எழுப்பட்டது. இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, மாவட் டப் பொருளாளர் ஜி.சம்பத், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் பி.ஆர்.நடராஜன், பனி யன் பேக்டரி லேபர் யூனியன் எஐடியூசி சங்கத் தின் பொதுச்செயலாளர் சேகர், எல்பிஎப் சங் கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ரங்க சாமி, பூபதி, ஐஎன்டியுசி மாவட்டச் செயலா ளர் சிவசாமி, எச்எம்எஸ் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் முத்துசாமி, அப்புக்குட்டி, எம் எல்எப் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சம் பத், மனோகரன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.