திருமாவளவனை அவதூறு செய்த பாஜக தலைவர் வீடு முற்றுகை
அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பாஜக ஆதிதிராவிடர் அமைப்பின் தலைவர் தடாபெரிய சாமியின் வீட்டை முற்றுகையிடச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் திட்டகுடியில் வசிப்பவர் பாஜக ஆதிதிராவிடர் பிரிவின் தலைவர் தடா பெரியசாமி. இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை அவதூறாகப் பேசியதாக குற்றம் சாட்டி அவரது வீட்டை முற்றுகையிட அரியலூர் மாவட்டம் அங்க னூரிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செந் துறை வடக்கு ஒன்றியச் செயலாளர் வீரவளவன் தலைமை யில் மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் புறப்பட்ட னர். தகவலறிந்த செந்துறை காவல்துறையினர் முப்பது பேரை கைது செய்தனர்.
திருச்சி, செம்பனார்கோவிலில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
திருச்சிராப்பள்ளி: கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருச்சிராப்பள்ளி பீம நகரில் வசிக்கும் ஷேக் தாவூத் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதி காரிகள் சோதனை நடத்தினர். கேகே நகரில் குடியிருந்த வந்த ஷேக் தாவூத் கடந்த ஆறு மாதங்களாக நியூ ராஜா. காலனியில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனமொன்றில் மென் பொறியாளராக வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வரு கிறார். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே வடகரை சின்ன மேலத் தெருவை சேர்ந்தவர் முஹ மது பைசல். இவரும், இவரது தந்தையும் மஸ்கட்டில் உள் ளனர். இந்த நிலையில் முஹமது பைசல் வீட்டுக்கு புத னன்று காலை ஆறு மணிக்கு வந்த தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் அவரது குடும்பத்தினரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
தமிழ் பல்கலை.யில் ஆளுகைக்குழு கூட்டம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம் அமைப்பதற்காக தமி ழக அரசு 2022-23ஆம் நிதியாண்டில் ரூ.1 கோடி ஒதுக் கீடு செய்துள்ளது. இதையடுத்து அருங்காட்சியகம் அமைப்பதற்கும், கட்டமைப்பு வசதிகளை அமைப்ப தற்கான ஆளுகைக்குழுக்கூட்டம் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பதிவாளர் (பொ) முனைவர் சி. தியாகராஜன், நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் முனை வர் இரா.காமராசு, வெளி வல்லுநர்கள் ஆறு.இராம நாதன், ஞா.ஸ்டீபன், ஓ.முத்தையா, சி.மகேசுவரன், பீட்டர் ஆரோக்கியராஜ், சக்திமுருகன் இராஜேந்திரன், ஆறுமுக. சீத்தாராமன், சே.செந்தமிழ்ப்பாவை மேலும், அலு வல்வழி உறுப்பினர்கள் வீ.செல்வகுமார், சீ.இளைய ராஜா, நா.மாலதி, ஆ.ராஜா, ம.இளங்கோவன், க.சுவாமி நாதன், பா.விஜயன் ஆகியோர் பங்கேற்றனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல் குற்றப் புல னாய்வு காவல் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், பட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலையிலுள்ள கொண்டிக்குளத்தில் உணவுப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினர் இரவு வாகனச் சோதனை நடத்தினர். அப்போது, இரு மினி வேன்களில் 102 மூட்டைகளில் நிரப்பப்பட்ட 5 ஆயிரத்து 100 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. வேன்களிலிருந்த மூவரில் இருவர் தப்பி யோடிவிட்டனர். சிக்கிய இளைஞரிடம் காவல் துறை யினர் நடத்திய விசாரணையில் பட்டுக்கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்த மினி வேன் ஓட்டுநர் எம்.அலாவுதீன் (28) என்பது தெரிய வந்தது. தப்பியோடிய பட்டுக் கோட்டை புதுசாலை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த எஸ். பெரியசாமி (50), திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டையைச் சேர்ந்த ஓட்டுநர் முருகேசனை காவல்துறை யினர் தேடிவருகின்றனர்.
குழந்தைகள் இறப்பைக் குறைப்பது குறித்த விழிப்புணர்வு முகாம்
அம்மாபேட்டை: இந்தியக் குழந்தைகள் நல மருத்து வர்கள் சங்கம் சார்பில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தை களின் இறப்பைக் குறைக்கும் விழிப்புணர்வு நிகழ்வு அம்மாபேட்டை அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. டாக்டர் செல்வக் குமார் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் பங்கேற்ற 50 குழந்தைகளுக்குத் தேவை யான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது. டாக்டர்கள் செல்வக்குமார், பழனிச்சாமி, ராஜ்மோகன், அஜந்தன், நீலாராணி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இலவசக் கண் சிகிச்சை முகாம்
பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், தஞ்சாவூர், பாபநாசம் வட்டார ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மற்றும் பாபநாசம் விவேகா னந்தா சமூகக் கல்வி தொண்டு நிறுவனம் இணைந்து இல வச கண் பரிசோதனை முகாமை நடத்தின. பாபநாசத்தில் நடந்த முகாமில் 173 பேருக்கு கண் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது, கண் புரை முற்றிய நிலையில் இருந்த 17 பேர் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள தஞ்சாவூர் இராஜா மிராசுதார் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 50 பேர் கண்ணாடி அணிய பரிந்து ரைக்கப்பட்டனர். நிகழ்வில் வட்டார மருத்துவ அலு வலர் தீபக், வட்டார மேற்பார்வையாளர் பாஸ்கரன், கண் மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ், தொண்டு நிறுவன செயலாளர் கண்ணதாசன் உட்பட பங்கேற்றனர்.
வாகனத் தணிக்கையில் முகமூடி, கத்தியுடன் சிக்கிய நபர்
கும்பகோணம்: கும்பகோணம் திருநீலக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீனிவாசநல்லூர் அபிராமி நகரில் திருவிடைமருதூர் காவல்துறை துணைக் கண்கா ணிப்பாளர் ஜாபர்சித்திக் தலைமையில் காவல்துறை யினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்ட னர். அப்போது காரிலிருந்து மூன்று பேர் தப்பியோடி விட்டனர். கும்பகோணத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (26) என்பவர் மட்டும் காவல்துறையிடம் சிக்கிக்கொண் டார். காரை பறிமுதல் செய்ததோடு அதிலிருந்த முகமூடி, மூன்று செல்போன், இரண்டு டைரி, கத்தி ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
முசிறி பழைய பேருந்து நிலையத்தை அகற்ற எதிர்ப்பு
முசிறி, பிப்.15- முசிறி பழைய பேருந்து நிலையத்தை அகற்ற எதி ர்ப்புத் தெரிவித்து நகர்மன்ற 17-ஆவது வார்டு உறுப்பி னர் தர்ணாவில் ஈடுபட்டார். முசிறி நகராட்சிக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற் றது. கூட்டம் துவங்கியவு டன், “பழைய பேருந்து நிலை யத்தை அகற்றும் நடவ டிக்கையைக் கைவிட வேண் டும், பேருந்து நிலையத்தின் உரிமத்தைப் புதுப்பிக்காம லும், பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் நீதி மன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பேருந்து நிலையத்தை இடிக்கக் கூடாது” என்று நகர் மன்ற 17-ஆவது வார்டு உறுப்பினர் மரகதம் கூட்ட ரங்கில் தர்ணாவில் ஈடுபட் டார். அப்போது நகர்மன்றத் தலைவர் கலைச்செல்வி மற்றும் நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி ஆகியோர் அவரிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி கூட்ட ரங்கில் அவரை அமர வைத்த னர். இதையடுத்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. கூட்டத்தில் 24 நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற னர். தொடர்ந்து 36 வகை யான மன்ற பொருள்களை தலைமை எழுத்தர் சேவியர் வாசித்தார். அப்போது நகர் மன்ற உறுப்பினர்கள் தன சேகர், சரவணன், இளைய ராஜா, சரவணன், சரண்யா ஆகியோர் தங்களது வார்டு களில் உள்ள பிரச்னைகளை எடுத்துக் கூறினர். நிறை வாக நகர்மன்றத் துணைத் தலைவர் சுரேஷ் நன்றி தெரி வித்தார்.
கருத்துரிமைக்கு மிரட்டல் விடுக்கும் ஒன்றிய அரசு: ஜவாஹிருல்லா
பாபநாசம், பிப்.15- இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம் அதிகார வர்க்கத்தால் மிரட்டப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலை வரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பின ருமான ஜவாஹிருல்லா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தில்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களில் வருமானவரித் துறை யினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக பிபிசி இரண்டு பகுதி களைக் கொண்ட ஆவணப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஒன்றிய அரசு, ஆவணப்படம் இந்தியாவில் வெளியாகா மல் தடுத்துவிட்டது. ஒன்றிய அரசின் நட வடிக்கையையும் மீறி பல இடங்களில் சமூக ஆர்வலர்கள் அந்த ஆவணப் படத்தைப் பார்த்துள்ளனர். இதன் பின்ன ணியில் பிபிசி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியி ருப்பது கருத்துரிமைக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரும் சவாலாகும். ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களுக்கு ஒன்றிய அரசின் சார்பில் விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை இது. கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே ஜனநாயகம். உலகில் மிகப்பெரிய ஜன நாயக நாடான இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம் அதிகார வர்க்கத்தால் மிரட்டப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்க! சார்பதிவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை, பிப்.15- ஏழை-எளிய மக்கள் வீட்டுமனைகளைப் பத்திரப் பதிவுசெய்வதில் உள்ள குளறுபடி களை நீக்க வேண்டும். பத்திரப் பதிவுத் துறையில் காலியாகவுள்ள பணியிடங் களை நிரப்ப வேண்டும். பதிவுத்துறையில் தனியார் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒப்பந்தவெளி முகமை வேலைகளை ரத்துச் செய்ய வேண்டும். பொதுக் கலந் தாய்வின் மூலம் பணியிட மாற்றங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டலத்தலைவர் பசுபதி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வெங்க டேசன், முத்துக்குமார், சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வெண்பன்றி வளர்ப்புக்கு இலவசப் பயிற்சி
திருச்சிராப்பள்ளி, பிப்.15- திருச்சிராப்பள்ளி கொட்டப்பட்டு கோழி பண்ணை சாலையில் செயல்பட்டு வரும் கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி-ஆராய்ச்சி மையத்தில் வியாழக்கிழமை (பிப்.16-ஆம் தேதி)வெண்பன்றி வளர்ப்பு இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் பன்றி இனங்கள், தேர்ந்தெடுத்து வாங்குதல், கொட்டகை அமைத்தல், இன விருத்தி மற்றும் பராமரிப்பு, தீவன மேலா ண்மை, நோய்த் தடுப்புமுறைகள், ஆலோ சனைகள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் வியாழன் காலை 10 மணியளவில் பயிற்சியில் சேர லாம். இந்தத் தகவலை கால்நடைப் பல்க லைக்கழக பயிற்சி-ஆராய்ச்சி மையத் தலை வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
நாகர்கோவில், பிப்.15 தமிழகத்தில் கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் புதன்கிழமையன்று சோதனை மேற்கொண்டனர். கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள காஜா முகைதீன் வீட்டிற்கு டெல்லியில் இருந்து வந்த என்.ஐ.ஏ. ஆய்வாளர் கணேஷ் பாபு தலைமையிலான குழு வினர் சென்றனர். அப்போது காஜா முகைதீன் கடந்த சில ஆண்டுகளாக நாகர்கோவிலில் வசித்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து என்.ஐ.ஏ. ஆய்வாளர் கணேஷ் பாபு தலை மையில் 3 பேர் புதனன்று காலை நாகர் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நாகர் கோவில் இசங்கன் விளையில் உள்ள காஜா முகைதீன் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் இருந்த காஜா முகைதீனிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங் கிய விசாரணை பகல் 12 மணி வரை நடந்தது. சுமார் 3 மணி நேரம் காஜா முகை தீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து அவ ரது செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இங்கி ருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு சென்ற னர்.
அறந்தாங்கியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அறந்தாங்கி: புதுக் கோட்டை மாவட்டம் அறந் தாங்கி மின்வாரிய செயற் பொறியாளர் வெங்கட் ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ இன்று (பிப்.16) காலை 10:30 மணி யளவில் அறந்தாங்கி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் மின் நுகர்வோர்ன் குறைதீர் கூட் டம் நடைபெறுகிறது. கூட் டத்தில் புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார் வைப் பொறியாளர் கலந்து கொள்கிறார். மின் நுகர் வோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னமராவதியில் காவல்துறை-வங்கியாளர் ஆலோசனை
பொன்னமராவதி: பொன்னமராவதி காவல் நிலையத்தில் வங்கி அதி காரிகள் மற்றும் நகை அட குக் கடை உரிமையாளர்களு டனான ஆலோசனைக் கூட் டம் நடைபெற்றது. திருவண்ணாமலை வங்கி ஏடிஎம் மையங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம் பவத்தைத் தொடர்ந்து, நடைபெற்ற ஆலோச னைக்கூட்டத்திற்கு பொன்ன மராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சத்திய நாதன், காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர கலந்துகொண்ட னர். கூட்டத்தில், வங்கி ஏடிஎம் மையங்களில் மறை முகக் கேமராக்கள் பொருத்த வும், அருகில் உள்ள காவல் நிலையங்களில் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கச்செய்ய வகை செய்யவும் அறி வுறுத்தப்பட்டது. கூட்டத்தில் வங்கி அதிகாரிகள், நகைக் கடை உரிமையாளர்கள், வர்த்தகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பெண்களுக்குத் தற்காப்புக் கலைப் பயிற்சி
ஆண்டிமடம்: ஆண்டி மடம் வட்டார வளமையத் தில் தற்காப்புக் கலைப் (கராத்தே) பயிற்சி துவக்க விழா அருமைராஜ் தலை மையில் நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் முனி யம்மாள், சந்திரலேகா ஆகி யோர் முன்னிலை வகித்த னர். ஆசிரியர் பயிற்றுனர் ஆசைத்தம்பி வரவேற்றார். தற்காப்புக் கலைப் பயிற்சி ஒருங்கிளைப்பாளர் சத்திய பாமா தற்காப்பு கலை தொடங்கப்பட்டதன் நோக் கம் குறித்துப் பேசினார். ஆசி ரியர் பயிற்றுனர்கள் ரமேஷ், உத்திராபதி, அகிலா ஆகி யோர் பங்கேற்றனர்.
11 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் அழகியமண வாளன், செங்கராயன்கட் டளை, மேலவரப்பன்குறிச்சி, கா.மாத்தூர், குருவாடி, கீழ காவட்டாங் குறிச்சி, குல மாணிக்கம், இலந்தைக் கூடம், கீழக்கொளத்தூர், விக்கிரமங்கலம், ஓலையூர் ஆகிய 11 கிராமங்களில் வியாழக்கிழமை முதல் அர சின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி யளிக்கப் பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்கள் மற்றும் சுற்றுவட்டார கிரா மங்களைச் சேர்ந்த விவசாயி கள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெற லாம் என மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரி வித்துள்ளார்.
பொற்றாமரைக்குளம் தண்ணீர்ப் பிரச்சனைக்கு தீர்வு கண்ட கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்
கும்பகோணம், பிப்.15- கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில் பொற்றாமரைக் குளத் திற்கு தண்ணீர் வழங்க ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி ரூ.19.60 லட்சத்தில் முடிக்கப்பட்டது. அதை சட்ட மன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். நிகழ்வில் மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் செ.இராம லிங்கம் , மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், கும்பகோணம் கோட் டாட்சியர் பூர்ணிமா, இந்துசமய அற நிலையத்துறை கும்பகோணம் உதவி ஆணையர் பி.இராணி, வட்டாட்சியர் பு.வெங்கடேஸ்வரன், சாரங்கபாணி கோவில் செயல் அலுவலர் சா.சிவ சங்கரி, மாநகராட்சி வார்டு உறுப்பி னர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர். கும்பகோணம் பொற்றாமரைக் குளத்தின் பரப்பளவு சுமார் 1.5 ஏக்கர். மாசி மக தெப்ப உற்சவத்திற்கு நான் கடி தண்ணீர் நிரப்பவேண்டும். தற் பொழுது குளத்தில் 2.5 அடி தண்ணீர் உள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றின் வெளியேற்று திறன் விநாடிக்கு 25 லிட்டர் ஆகும்.எனவே, இதன் மூலம் தெப்ப உற்ச வத்திற்கு தேவையான 1.5 அடி தண்ணீர் மூன்று நாட்களில் நிரம்ப வாய்ப்புள்ளது. இந்தப் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு செய்தது பாராட்டுக்குரியது என்கின்ற னர் கும்பகோணம் மக்கள்.
சிராஜ்பூர் நகரில் கம்பி வேலிகளைச் சேதப்படுத்தியதாக ஏழு பேர் கைது
தஞ்சாவூர், பிப்.15- தஞ்சாவூர் நாஞ்சிக் கோட்டை சாலை சிராஜ்பூர் நகரில் கோட்டாட்சியர் உத்த ரவை மீறி கம்பி வேலிகளைச் சேதப்படுத்திய ஏழு பேரைக் காவல் துறையினர் இரவு கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சிராஜ்பூர் நகரில் காலியாக இருந்த இடத்தில் பிப்ரவரி 4-ஆம் தேதி 300-க்கும் அதிகமானோர் திடீரென தற்காலிக கொட்ட கைகளை அமைத்தனர். பின்னர் காவல்துறை- வரு வாய்த்துறையினர் நிகழ்வி டத்துக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்தி கொட்டகை அமைத்தவர்களை கலைந்து போகுமாறு கூறினர். மேலும், அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவை கோட் டாட்சியர் எம். ரஞ்சித் பிறப் பித்தார். இதனால் அங்கு காவல்துறையினர் பாது காப்புப் பணியில் ஈடுபட்டி ருந்தனர். இந்த நிலையில், திங்கட் கிழமை மாலை அங்கு போடப் பட்டிருந்த கொட்டகைகளை சிலர் அகற்றினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் அதிகமானோர் அப்பகுதியில் திரண்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த கம்பி வேலிகள், கருங்கல்லை உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து பூவத்தூர் ஜெய்சங்கர் (50), மறியல் ராஜன் (56), தமிழ் முதல்வன் (54), மாரிமுத்து (62), வினோத் ராஜா(38), முனியாண்டவர் காலனி விஜயேந்திரன்(35), குருங்குளம் முருகானந் தம்(36) ஆகிய ஏழு பேரையும் கோட்டாட்சியர் உத்தரவை மீறி கம்பி வேலிகளைச் சேதப்படுத்தியதாக காவல் துறையினர் கைது செய்தனர்.
கும்பகோணத்தில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி
கும்பகோணம்: கும்பகோணம் கார்த்தி வித்யா லயா பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றி யுள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து ஒன்பதுக்கும் மேற் பட்ட குழுக்கள் பங்கேற்றன மாணவர்களுக்குத் தனிப் பிரிவாகவும், மாணவி களுக்குத் தனிப் பிரிவாகவும் போட்டிகள் நடத்தப் பட்டன. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெற்றவர்களுக்கு தங்க பதக்கம் இரண்டாவது பரிசு பெற்றவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப் பட்டது. பரிசுகளை பள்ளியின தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கினார்.
கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர வாய்ப்பு
திருச்சிராப்பள்ளி: திருச்சிராப்பள்ளி மன்னார்புரம் செங்குளம் காலனியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரி யத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவித்தொகை பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறந்த தரத்திலான கல்வியை வழங்கும் நன்மதிப்புள்ள தனி யார் பள்ளிகள் மூலம் கல்வி வழங்க தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அனுமதி அளித்து அர சாணை வெளியிட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மூலம் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு கல்வி வழங்கவும், அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரை பயின்று அதிக மதிப்பெண் பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளில் வாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம். தனியார் பள்ளிகளில் 2023-24 கல்வியாண்டிற்கு பிப்ர வரி-மார்ச் மாதங்களில் சேர்க்கைகள் நடைபெறும். தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் பெறப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் வெங்க டேசன் தெரிவித்துள்ளார்.
இலவசத் தென்னங்கன்றுகள் வழங்கல்
பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டா ரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் திட்டம், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்களை வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) தி.பாலசரஸ்வதி ஆய்வு செய்தார். பின்னர் கலைஞர் திட்டக் கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ள கீழ திருப்பந்துருத்தி, காருகுடி கிராமங்களில் விவசாயி களுக்கு இலவசத் தென்னங்கன்றுகளை வழங்கினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை திருவையாறு துணை வேளாண் அலுவலர் கோவிந்தராஜன் வேளாண்மை உதவி அலுவலர்கள் இளந்திரையன், ஐஸ்வர்யா, கிடங்கு கண்காணிப்பாளர் நித்யா ஆகியோர் செய்திருந்தனர். பின்னர் திருவையாறு வேளாண் விரிவாக்க மையத் தில் கலைஞர் திட்டத்தின் கீழ் இருப்பு வைக்கப்பட் டுள்ள உரங்களின் இருப்பு விவரங்களை வேளாண் துணை இயக்குநர் கேட்டறிந்தார்.
பணப்பை திருட்டு
திருச்சிராப்பள்ளி: விழுப்புரம் காமதேனு நகரைச் சேர்ந்தவர் கவிப்பிரியா (22). இவர் பயிற்சி மருத்துவ ராக திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையில் பணி யாற்றி வருகிறார். இவரது கைப்பையை செவ்வாயன்று அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றுவிட்டார். இது குறித்து கவிப்பிரியா அளித்த புகாரின் அடிப்படை யில் விசாரணை நடத்த்ய காவல்துறையினர், திருச்சி ராப்பள்ளி துவாக்குடி வாழவந்தான் கோட்டை பர்மா காலனியைச் சேர்ந்த சலீம் (38) என்பவரைக் காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்த பணப்பை யை பறிமுதல் செய்தனர்.
தனியார் வேலை வாய்ப்பு முகாம்
திருச்சிராப்பள்ளி: திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.17 ஆம்-தேதி) காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. முகாமில் தனியார் துறை நிறு வனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் பத்தாம் வகுப்பு, 12-ஆஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு முடித்த 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட வர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
செல்போன் விற்பனைக் கடை கிளை மேலாளருக்கு வாரண்ட்
அரியலூர்: அரியலூர் மின்நகரைச் சேர்ந்தவர் மோகன் (40).இவர், அரியலூரில் உள்ள தனியார் (பூர்விகா) செல்போன் விற்பனைக் கடையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ.20 ஆயிரம் மதிப்பில் புதிய செல்போன் வாங்கியுள்ளார். செல்போன் வாங்கப்பட்ட ஒரு மாத காலத்துக்குள் இரண்டு முறை அதில் பிரச்சனை ஏற்பட்டு, அதே கடையில் கொடுத்துள் ளார். அவர்கள் தற்காலிகமாக பிரச்சனைகளை சரி செய்து கொடுத்துள்ளனர். அதையடுத்து, மீண்டும் செல்போனின் பிரச்சனை ஏற்பட்டபோது செல்போனை பெற்றுக்கொண்டு புதிய போன் வழங்குமாறு விற்ப னையாளரை மோகன் கேட்டுள்ளார். போனை பெற்றுக் கொண்ட விற்பனையாளர், சரி செய்து தரவும் இல்லை. புதிய போன் வழங்கவும் இல்லை. விற்பனையாளர் பிரச்சனையை முடித்துவைக்கவும் முன்வரவில்லை. இதையடுத்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2019-ஆம் ஆண்டு செப்டம் பர் மாதம் மோகன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணையம் குறைபாடுள்ள செல்போனை விற்பனை செய்த கடை, மோகனுக்கு புதிய செல் போன் வழங்க வேண்டும். குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ.20,000 வழங்க வேண்டும் என்றும் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. தீர்ப்பின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை யை கடை நிர்வாகம் வழங்கவில்லை. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் செல்போன் விற்பனைக் கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மோகன் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தலைவர் வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு தனியார் செல்போன் விற்ப னைக் கடையின் கிளை மேலாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.