ஜாம்பவானோடை அரசுப் பள்ளியில் பாரதியார் தினம்
முத்துப்பேட்டை, டிச.12 - மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்தநாள் விழா திருவாரூர் மாவட்டம் ஜாம்ப வானோடை அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் டி.விஜயராணி தலைமையில் திங்களன்று நடைபெற்றது. கல்வி ஆலோசகர் பட்டுக் கோட்டை பாரதி பேரியக்கத் தின் தலைவர் முனைவர் நா.ராசமோகன் முன்னிலை வகித்தார். பிரியதர்ஷினி பாரதி யார் ஒப்பனையில், பாரதியார் பாடல்களை பாடினார். 28 மாணவர்கள் சொற்பொழிவு கள் ஆற்றி, கவிதைகள் வாசித்தனர். இதில் பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்றனர்.
பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி
தஞ்சாவூர், டிச.12- தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி ஒன்றியம் துலுக்க விடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், செவ் வாயன்று மாணவிகளுக்கான தற்காப்புக் கலை பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. பயிற் சியை வட்டார கல்வி அலுவ லர் கா.கலாராணி தலைமை யேற்று துவக்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார் வையாளர் அ.முருகேசன், பள்ளி தலைமையாசிரியர் வாசுகி, ஆசிரியர் பயிற்றுநர் சரவணன் மற்றும் ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர். கராத்தே பயிற்சியாளர் பிரபு மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளித்தார்.
இலவச கண் பரிசோதனை முகாம்
பாபநாசம், டிச.12 - தஞ்சாவூர் இராசா மிராசு தார் கண் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு கிராம வங்கியின் அய்யம்பேட்டை கிளை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. அய்யம்பேட்டையில் நடந்த முகாமில் மருத்துவர் நித்யா, கண் மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ் ஆகியோர் 75 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் கண் புரை முற்றிய நிலையில் இருந்த 3 பேருக்கு ஐ.ஓ.எல். லென்ஸ் பொருத்திப் பார்வையளிக்க, தஞ்சாவூர் இராசா மிராசுதார் கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர். 50 பேருக்கு கண்ணாடி அணிய பரிந்துரைத்தனர். வங்கியின் அய்யம்பேட்டை கிளை மேலா ளர் சத்யா, ஊழியர் வெற்றி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டை மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் செய்திருந்தது.
உரிய காலத்திற்குள் வருமான வரி செலுத்த அறிவுறுத்தல்
பெரம்பலூர், டிச.12 - பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட வரு மான வரித்துறை சார்பில் முன்கூட்டியே வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் திங்களன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சியில் வருமான வரி அதிகாரிகள் க. சந்திரசேகரன் மற்றும் நா.மாதவன் ஆகியோர் பேசுகையில், நிதியாண்டில் ஈட்டும் வருமானத்திற் கான வரியை முதல் தவணையை (15 சதவீதம்) ஜூன் 15-க்குள்ளும், 2-வது தவணையை (45 சத வீதம்) செப்டம்பர் 15-க்குள்ளும், 3-வது தவணையை (75 சதவீதம்) டிசம்பர் 15-க்குள்ளும், 4-வது தவ ணையை (100 சதவீதம்) மார்ச் 15-க்குள்ளும் செலுத்த வேண்டும். உண்மைக்கு மாறான தக வல்களை தெரிவித்து வரியை திரும்பப் பெற விரும்புவோர் அபராதம் மற்றும் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே உரிய நேரத்தில் தவணையை செலுத்த வேண்டும்” என்றனர். பட்டய கணக்காளர் ப்ரதீப் மற்றும் வரிஆலோ சகர் முத்துகுமாரசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தொழில் முனைவோர், வணிகர் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.